states

img

வல்லுறவுக் குற்றவாளியை வரவேற்று ‘அண்ணன் வந்துட்டார்’ என போஸ்டரா?

புதுதில்லி, ஏப்.12- மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுபாங் கோந்தியா. இவர் ஆர்எஸ்எஸ் மாண வர் பிரிவான ‘ஏபிவிபி’ (ABVP)-யின் தலை வராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலி யல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், கோந்தியா வுக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அந்த ஜாமீனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். தன்னைத் திருமணம் செய்து கொள்வ தாக கூறி பலமுறை என்னுடன் அவர் உறவு கொண்டார். குழந்தை உருவானபோது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து விட்டார்.

என்னை மோசடி செய்து விட்டார் என்று அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டி ருந்தார். மேலும் சுபாங் கோந்தியாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அவரது ஆதரவா ளர்கள் போஸ்டர் அடித்துக் கொண்டாடிய தாகவும், ‘அண்ணன் வந்து விட்டார்’ என்று போஸ்டரில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாக வும் அந்தப் பெண் குற்றம் சாட்டியி ருந்தார். மேலும், உயர் நீதிமன்றம் தனது குற்றச்சாட்டுக்களையும், நடந்த உண்மை களையும் சரிவர கவனிக்கவில்லை. இந்த வழக்கின் தீவிரத்தையும் புரிந்து கொள்ள வில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, போஸ்டர் விவகாரம் குறித்து கடும் கோபமடைந்தது. 3 பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றி ருந்த நீதிபதியான ஹீமா கோலி, “இது என்ன, ‘அண்ணன் வந்துட்டார்..?’ என போஸ்டர்..? எதை நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்..?” என்று ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் செயலை கண்டித்தார். அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணாவும் குறுக்கிட்டு, “உங்க அண்ணனை இந்த ஒரு வாரத்திற்கு ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள்” என்று காட்டமாக கூறினார். இந்த வழக்கு தொடர்பாக, ஏபிவிபி தலைவர் கோந்தியா, சிவராஜ் சிங் சவு கான் தலைமையிலான ம.பி. பாஜக அரசு ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.