states

img

பண்டிட்டுகள் வெளியேறிய போது ஆட்சியில் இருந்தது ஆளுநர்தான்!

உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

புதுதில்லி, மார்ச் 19 - ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் பல  பொய்யான விஷயங்கள் காட்டப்பட்டுள் ளன எனவும், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உண்மை களை திரித்துள்ளனர் என்றும் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத் தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, ஒரு வணிக ரீதி யிலான திரைப்படமா, அல்லது ஆவணப் படமா? என்பதைத் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். வணிகப் படமாக இருந்தால், யாருக்கும் பிரச்சனை இல்லை. இது ஒரு ஆவணப்படம் என்றால், எதைக் காட்டினாலும் அது உண்மையாக இருக்க வேண்டும்.  படம் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தயாரிப்பாளர்கள் கூறி யுள்ளனர். ஆனால் படத்தில் பல பொய்கள் திட்டமிட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 1990 -ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பதே மிகப்பெரிய பொய். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறிய போது காஷ்மீரில் பரூக் அப்துல்லா முதல்வ ராக இல்லை. ஜம்மு - காஷ்மீர் ஆளுநராக ஜக்மோகன் இருந்தார். மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான பாஜக ஆதரவு அரசு தான் இருந்தது. ஆனால், படத்தில் வி.பி. சிங்கின் அரசு மற்றும் பாஜக-வை ஏன் காட்ட வில்லை? உண்மைகளுடன் விளையாடு வது சரியல்ல.  மேலும், “அச்சமயத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டும் புலம்பெயரவும்; கொல்லப்படவும் இல்லை. முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர், அவர்களும் காஷ்மீரில் இருந்து புலம் பெயர வேண்டியிருந்தது, இன்னும் அவர்கள் காஷ்மீருக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், தங்கள் இல்லத்தை விட்டு சென்ற அனைவரையும் திரும்ப வரவைப்ப தற்கான சூழலைத்தான் உருவாக்க வேண் டும். மதப்பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது.”  இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.