states

img

ஜி-20 மாநாடும், வெளியேற்றப்பட்ட ஏழைகளும்...

புதுதில்லி கீதா காலனி பேருந்து நிறுத்தம் அருகே குச்சா  (தற்காலிகம்) பாதையில் சென்றால் சில மீட்டர்  தூரத்தில், ஒரு மேம்பாலத் தைப் பார்க்க முடியும்.  பாலத்தின் அடியில் பெலா எஸ்டேட் பகுதி உள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டை காரணம் காட்டி இங்கிருந்த வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன.

குடிசைகள் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல...

இங்கு வசித்தவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாமல், மேம்பாலத்தின் அடியில் தங்கியி ருந்தனர். செப்டம்பர் 6-ஆம் தேதி (புதன்கிழமை), அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், யாரும் இங்கே குடியிருக்கக் கூடாது. வெளிநாட்டுப் பிர முகர்கள் இந்தப் பாதையில் பயணிக்கும் போது உங்களது குடிசைகள் அவர்களது கண்ணில் படும். இது நமது நாட்டிற்கு நல்லதல்ல எனக் கூறியுள்ளனர்.

நாங்கள் பூச்சிகளா...?  தேவையற்ற மனிதர்களா...?

இது குறித்துப் பேசிய 62 வயது நிரம்பிய கன்ஹா ராம். “எங்கள் குடும்பம் 1900-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயம் செய்து இப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. “நாங்கள் என்ன பூச்சிகளா...? அல்லது தேவையற்ற மனிதர்க ளா? இது எங்கள் (நமது) நாடு இல்லையா? அரசாங்கம் ஏன் எங்களை எங்கேயோ போகச் சொல்கிறது?”. எனக் கொந்தளித்தார். மற்றொருவரான ஹீராலால் கூறுகையில், “விவசாயம் செய்த எங்களது நிலங்கள், இத்த னை வருடங்களாக நாங்கள் வாழ்ந்த வீடு, இவற் றையெல்லாம் இழந்து விட்டு நாங்கள் எங்கே செல்வது?  காசு இருந்தால் நாங்கள் ஏன் இந்த மேம்பாலத்தின் கீழே வசிக்கப் போகிறோம்” என்றார். பெல்லா எஸ்டேட்டைச் சேர்ந்த பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் கூற்று அதிர்ச்சியாக உள்ளது.  “மாணவர்களின் பாடப் புத்தகங்கள், பள்ளிக்குக் கொண்டு செல்லும் பைகளை காவல் துறையினர் சேகரித்துள்ளனர். அவற்றை மாணவர்களிடம் திரும்ப வழங்குவதற்குப் பதிலாக அவற்றைப் புதைத்துள்ளனர்”. 

வீட்டை இடித்து பூங்காக்கள்

மார்ச் மாத இறுதியில், பெலா எஸ்டேட் பகுதி யை இடிக்கும் பணிகள் நடைபெற்றபோது, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன், அப்பகுதியில் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கூறியதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக் கின்றனர்.  ஆனால், இடிக்கப்பட்ட இடங்களில் இப்பகுதி மக்கள் நட்டு வைத்த மரங்களைத் தவிர வேறு எதுவும் இங்கில்லை. செப்டம்பர் மாதம் நெருங்கிய நிலையில் இங்கு வசிக்கும் நகர்ப்புற ஏழைகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள் ளன. சில வாரங்களுக்கு முன், புல்டோசர்கள் மூலம் அனைத்துப் பொருட்களையும் குழிக ளுக்குள் தள்ளி மூடியுள்ளனர்.  தற்போது, அப்பகுதி மக்கள் குடிநீர் வசதி யின்றி தவித்து வருகின்றனர். தண்ணீர் விநியோ கம் செய்து வந்த டேங்கர் லாரி வரவில்லை. கழி வறைகளும் இல்லை. இதனால் பெண்களை கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இங்கு வசித்த வர்கள் தற்போது சுகாதாரமற்ற சூழ்நிலையில், அரசின் உதவியின்றி வாழ்வதால் நோய்க்கொடு மைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

பிரதமரின் வாக்குறுதி பொய்யாப் போனது

பேலா எஸ்டேட்டில் வசிக்கும் மக்கள் சில அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவிக் கின்றனர்.  தங்கள் முன்னோர்கள் ஆங்கிலேயர் களுக்கு செலுத்திய லகான் சீட்டுகள்  தங்களிடம் இருப்பதாகவும், தங்களுடைய நிலத்தை விவசாயத் திற்குப் பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.  எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஜஹான் ஜுக்கி வஹி மகான் ‘ (தற்காலிக குடிசைகளுக்குப் பதி லாக வீடுகள்) என்ற பிரதமரின் வாக்குறுதிக்கான படிவங்களை அனைவரும் பூர்த்தி செய்தி ருந்தனர்.  “ஜஹான் ஜுக்கி வஹி மகான் தோ சோரோ, ஜஹான் ஜுக்கி தீ வஹி ஷம்ஷன் பனா தியா, (தற்காலிக குடிசைகள் இருந்த இடத்தில் வீடு களை உருவாக்குவதை மறந்து விட்டார்கள். அதற்குப் பதிலாக கல்லறைகளை கட்டியுள்ள னர்” என்கிறார் நரேஷ் என்பவர்.

ஊதும் கார்ப்பரேட் ஊடகங்கள்

சில சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்து பவர்களும் வேறு சிலரும்  “நகரம் எவ்வளவு அழ காக அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று பாராட்டு கின்றனர். இது  அப்படியே இருக்கும் என்று நம்பு கின்றனர். ஆனால், அதே நேரத்தில் வெளிநாட்டி னர் பிரகதி மைதானத்தை (உச்சிமாநாடு நடை பெறும் இடம்) கடந்து செல்லும்போது,  குடிசை களைக் (ஜூக்கிகளை) காணலாம். அவை பச்சை  துணியால் மூடப்பட்டிருக்கிறது.

வெளியேற்றுவது குற்றமில்லையாம்

எங்கள் வீடுகளை இடிப்பதற்கு  அரசு மேற் கொண்ட இந்த முயற்சி ஒன்றும் முதல் முறை யல்ல. பேலா எஸ்டேட், துக்ளகாபாத், கஸ்தூரிபா நகர் மற்றும் இடிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்ப வர்கள் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் வீடுகளை அகற்ற அரசு முயற்சிக்கும். நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.  இப்போது, “ஜி20  உச்சிமாநாட்டின் மூலம், தலைநகரில் இருந்து எங்களை ஒழிக்க அர சாங்க அனுமதியைப்  (இது குற்றமில்லா நடவ டிக்கை என வாதிடுகிறது) பெற்று வெற்றியடைந் துள்ளனர்.

கண்டு கொள்ளவுமில்லை ; கவலைப்படவும் இல்லை...

2010-11-ஆம் ஆண்டுகளில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது, எங்களை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. நாங்கள் எப்படியோ தப்பி இங்கு வாழ முடிந்தது, ஆனால், இப்போது வெளியேற்றியே விட வேண்டும் என்பதில் ஆக்ரோஷமாக உள்ளது.  ஏழைகளாகிய எங்களை யாரும் கண்டு கொள்ளவுமில்லை. கவலைப்படவும் இல்லை.  மாநாட்டையொட்டி நொய்டா செக்டார் 16-இல், டிஎன்டி  பறக்கும் பாலத்துக்கு (ஃப்ளை வேக்கு) அருகில் உள்ள சிறிய கடைகள் மற்றும் வீடுகள்  பெரிய தகரக் கொட்டகைகளால் ஆகஸ்ட் மாதமே மறைக்கப்பட்டுவிட்டன. இது குறித்து சிறு கடைக்காரர்கள் கூறுகை யில், “ கடைகள் அவ்வழியாக செல்பவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக மறைத்துள்ளனர். இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம்”  என்றனர்.  மயூர் விஹார் கட்டம்-1 அருகே, இந்தாண்டு தில்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. இப் போது அவர்கள் அப்பகுதியை விட்டு வெளி யேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சாலைகளின் ஓரங்களிலோ, மேம்பாலங்களுக்கு அடியிலோ வசிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

ஒளிரும் விளம்பரங்களும், இருண்ட மூலைகளும்

ஜி-20 உச்சிமாநாடு நடைபெறும் போது, நீரூற்றுகள் எழும்பும்போது நகரம் ஒளிரும். பிர தமரின் படத்துடன் ஜி-20 மாநாட்டுப் பதாகைகள். தில்லி முழுவதும் “பன்முகத்தன்மை” மற்றும் “உள்ளடக்கத்தன்மை” என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகளையும் போர்டுக ளையும் காணமுடியும். அதே நேரத்தில் நூற்றுக் கணக்கான வீடற்ற, ஆதரவற்ற நகர்ப்புற ஏழைகள் தலைநகரின் இருண்ட மூலைகளில் கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்.  ஜி-20 கூட்டத்திற்கு சற்று முன்பு நாக்பூரில்  சாலைகளிலிருந்த பிச்சைக்காரர்கள் இரவோடு இரவோக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் விருப்பத்துடன் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றதாக காவல்துறை விளக்கமளிக்கிறது.  நாக்பூரின் கதை இப்படியென்றால் மும்பை யின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. நகர்ப் புற ஏழைகள் வசிக்கும் பகுதி பரந்து விரிந்து  இருப்பதால் அங்கு வசிப்பவர்களை அதிகாரிக ளால் வெளியேற்றமுடியவில்லை. இருப்பினும் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடுப்புகளால் மறைக்கப்பட்டுள்ளன. தவிர இந்தூர், விசாகப் பட்டினத்திலும் குடிசைப் பகுதிகள் வெளியே தெரியாதவாறு மறைக்கப்பட்டுள்ளன. ஜி-20 மாநாடு  இரண்டு விஷயங்களை நிரூ பித்துள்ளது.  முதலாவது மாநாட்டில் நகர்ப்புற ஏழைகளும் நலிவடைந்த பிரிவினரும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாப்பதில் நிர்வாகம் படு தோல்வி யடைந்துள்ளது. இரண்டாவது மக்களை பின்னுக்குத் தள்ளி நகரை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

தகவல்கள்: நியூஸ் கிளிக்
படங்கள்: ராய்ட்டர்ஸ்