அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை குறி வைக்கும் என்று கடந்த 2022 ஆகஸ்ட் மாதமே அண்ணாமலை பேட்டியில் கூறி யிருந்தார். “அதிமுக ஆட்சி காலத்தில் போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த போது, முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கில் அமலாக் கத்துறையும் வழக்கு பதிவு செய்துள் ளது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக் கப்படுமா?” என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப் பட்டது. இதற்குப் பதிலளித்த அண்ணா மலை, “வெயிட் பண்ணுங்கண்ணா.. அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள்” என்று கூறினார்.
அண்ணாமலையின் இந்தப் பேட்டி க்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் அப்போதே பதிலளித்து இருந்தார். அதில், அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரானார்? அல்லது அவர் இணை இயக்குநரா? ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக் குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடி னாரே.. அவர் தானே? என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்க முடிய வில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? தன்னிச்சையாக செயல்பட கூடிய அம லாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். இதன்மூலம் அம லாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது. ஆவணங்கள் இருந்தால் அண்ணாமலை கொடுக் கட்டும், பதில் சொல்கிறேன். மின்துறை மீதான அண்ணாமலை குற்றச்சாட்டு க்கு ஏற்கக் கூடியதாக இல்லை. ஒன்றிய அரசு எவ்வளவு டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய கூறியுள்ளது என தெரிவிக்க வேண்டும். இதை பற்றித் தான் செய்தி போட வேண்டும். அம லாக்கத்துறை தனி அமைப்பு. ஆனால் பாஜகவின் மாநில தலைவராக இருப்ப வர், இன்னார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எப்படி சொல்ல முடியும்? ஒருவேளை அவர்கள்தான் அமலாக்கத்துறையை கட்டுப்படுத்து கிறார்களா? அமலாக்கத்துறையை ஒரு அரசியல் கட்சி எப்படி பயன்படுத்து கிறது என்பது அண்ணாமலை பேச்சில் தெரிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அண்ணாமலை கூறியபடி தற்போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.