states

img

அதிகரிக்கும் வராக்கடன்

மும்பை, ஜன.2- வங்கித் துறையில் வராக் கடன்களின் வீதம் சாதாரண நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 8.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், அதிதீவிர நெருக்கடியான சூழலில் இதன் அளவு 9.5 அதிகமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. சென்ற ஆண்டு  செப்டம்பர் மாதம் இதன் அளவு 6.1 சதவீத மாக கணிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத் தன்மை (Financial Stability) குறித்த இந்த ஆய்வு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி,  நிதிப்பற்றாக்குறை அளவு மற்றும் சில்லரை பணவீக்கம் போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டு நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2022 மார்ச் மாதத்தில் வங்கிகளின் வராக்கடன் அளவு 9.8 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் அளவு 8.8 சதவீதத்திலிருந்து 10.5 சதவீத மாகவும், தனியார் வங்கிகளில் இதன் அளவு 4.6  சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாகவும், வெளி நாட்டு வங்கிகளில் 3.2 சதவீதத்திலிருந்து 3.9 சத வீதமாகவும் உயர்ந்துள்ளது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

மேலும் வங்கி களின் மூலதனத் தகுதி வீதம் (Capital Adequacy Ratio) சாதாரண நிலையில் 15.4 சதவீத மாகவும், சற்று நெருக்கடியான கட்டத்தில் 14.7 சதவீதமாகவும், தீவிர நெருக்கடி மிகுந்த  காலகட்டத்தில் 13.8 சதவீதமாகவும் இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு  16.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்தி யாவில் உள்ள நிதி நிறுவனங்கள் கடும் பேரிடர்  மிகுந்த இந்த காலகட்டத்திலும் கூட மீள்தன்மை யுடைய வகையிலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும், அனைத்து வங்கி களும் அதிதீவிர நெருக்கடியான கால கட்டத்தையும் சமாளிக்கும் வகையில் குறைந்த பட்ச மூலதனத் தகுதியோடு செயல்படும் அள விற்கு வலுவாக உள்ளது என்றும் கூறினார்.  

மேலும் நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் உயர்ந்துள்ளதாலும், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை  குறைந்து இருப்பதாலும் தொழில் முனை வோர்கள் மத்தியில் நேர் மறையான நம்பிக்கை யும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத் தன்மையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் பாதிப்பின் வரவால் இந்தியப் பொருளாதாரம் மற்று மொரு கடினமான காலகட்டத்தை எதிர்நோக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.  செய்தித் தொகுப்பு: சிவசங்கர்