2022-2023 நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் சேமிப்பானது, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2021-2022 நிதியாண்டில், இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 7.2 சதவிகிதமாக இருந்தது. இது 2023-இல் 5.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
சேமிப்பு 2.1 சதவிகிதம் சரிவு
2020 - 2021 நிதியாண்டில், இந்தியக் குடும் பங்களின் சேமிப்பு ரூ. 22 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2021-22 நிதியாண்டில் ரூ. 16 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக குறைந் தது. அதுவே 2022 - 2023 நிதியாண்டில் மேலும் குறைந்து ரூ. 13 லட்சத்து 76 ஆயிரம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5.1 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டைவிட 2.1 சதவிகிதம் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
கடன்கள் 2 சதவிகிதம் அதிகரிப்பு
மற்றொரு புறத்தில், இந்தியக் குடும்பங் களின் கடன்கள், நாடு விடுதலை அடைந்த தற்கு பிறகு, இரண்டாவது முறையாக 2022-2023 நிதியாண்டில்தான் மிகவேகமாக அதிகரித் துள்ளது. 2021-22 நிதியாண்டில், இந்தியக் குடும்பங் களின் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.8 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022-23 நிதியாண்டில் 5.8 சதவிகிதமாக அதி கரித்துள்ளது. இதற்கு முன்பு 2007-ஆம் நிதி யாண்டில் இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன் அளவு 6.7 சதவிகிதமாக அதிகரித்திருந் தது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான தாக்கம் செலுத்தும் நுகர்வு
இந்தக் கடன்களில் பெரும்பகுதி மக்களின் அன்றாட நுகர்வுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் மூலமாக அதிகரித்த கடன்களாக உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அதாவது மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அதி கப்படியாக கடன் வாங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
வீடு, மருத்துவம், கல்விக்கான செலவு அதிகரிப்பு
2021-22 நிதியாண்டில் 36.9 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன், 2022-23 நிதியாண்டில் 37.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில், இந்தியாவின் மருத்துவ பணவீக்கம் 12 சதவிகிதமாக இருந் தது. ஐந்தாண்டுகளில் சிகிச்சைச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவு அதி கரித்துள்ளது. அது குடும்பச் செலவினங்களி லும், கடன்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. கல்விக்கான பணவீக்க விகிதம் (கூடுதல் செலவினம்) 11 முதல் 12 சதவிகிதம் வரை கணிச மாக அதிகரித்துள்ளது.
8 ஆண்டுகளாக ஊதியம் உயரவில்லை
இவ்வாறு அதிக பணவீக்கம்- அதாவது விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலை யில், மறுபுறத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் உண்மையான ஊதி யத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை. இது மக்களின் சேமிப்பு கரைவதற்கும், கடன்கள் அதிகரிப்பதற்கும் காரணமாகியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், உள்கட்ட மைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவ தாக தெரிந்தாலும், இதற்கு பின்னால் அதீத கடன் சுமை இருப்பதை எதிர்க்கட்சிகள் அண்மை யில் சுட்டிக்காட்டியிருந்தன. அது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவின் கடன் ரூ.152 லட்சம் கோடி
ஒன்றிய அரசின் பட்ஜெட் அறிக்கைப்படி 2023 மார்ச் 31 நிலவரப்படி இந்தியாவின் மொத்தக் கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சேர்த்து) 152 லட்சத்து 61 ஆயிரத்து 122 கோடியே 12 லட்சமாக இருந்தது. இது 2024 மார்ச் 31 அன்று 169 லட்சத்து 46 ஆயி ரத்து 666 கோடியே 85 லட்சம் ரூபாயாக உய ரும் என கணிக்கப்பட்டு உள்ளது. மோடி ஆட்சியில் மட்டும் 100 லட்சம் கோடி கடன் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கடந்த 67 ஆண்டுகளில் மொத்தமே 55 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இந்தியாவின் உள்நாட்டு - வெளிநாட்டுக் கடன் இருந்தது. ஆனால், மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் மட்டும் கூடுதலாக 100 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.