states

img

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு குற்றவியல் நடைமுறை மசோதா அடிப்படை உரிமைகளை பறிக்கிறது

புதுதில்லி, மார்ச் 29 - ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடை முறை மசோதா, தனிநபரின் அடிப்ப டை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஒன்றிய உள்துறை இணைய மைச்சர் அஜய் மிஸ்ரா, நாடாளு மன்ற மக்களவையில், குற்றவாளி களை அடையாளம் காண உயிரியல் மாதிரிகளை எடுக்க வழி செய்யும் புதிய குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணுதல்) மசோதா வை தாக்கல் செய்தார்.  அப்போதுதான், இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்த மசோதா ஒரு தனிநபரின் அடிப்படை உரிமையின் நேரடி மீறல் என்று குற்றம் சாட்டின. ஒன்றிய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள குற்றவியல் நடைமுறை மசோதா, ஒரு குற்றவாளி, கைது  செய்யப்பட்ட அல்லது காவலில் வைக்கப்பட்ட நபரின் விரல் பதிவுகள்,  உள்ளங்கை அச்சு பதிவுகள், கால் அச்சு பதிவுகள், புகைப்படங்கள், கரு விழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல், உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள்,  கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை சேகரிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை அனுமதிக்கிறது. சிவில்  உரிமைகளுக்காகவோ அல்லது உண்மையான கோரிக்கை களுக்காகவோ மறியல் செய்ததற் காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டால், அந்த நபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்துகிறது. இதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.