states

img

நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை

புதுதில்லி,பிப்.27- ‘நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது வேதனை அளிக்கிறது,’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வருத்தத்துடன் தெரிவித்துள் ளார்.  அறிவுசார் சொத்துரிமை தக ராறு வழக்குகள் குறித்த  கருத்த ரங்கம், தில்லியில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பை நன்கு பலப்படுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட  இல்லை. தலைமை  நீதிபதியாக நான் பொறுப்பேற்ற பிறகு, கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். வெறும் நிதி ஒதுக்கீட்டினால் மட்டுமே உள்கட்டமைப்பு வசதி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. சில மாநிலங்கள் இந்த நிதியை முழுமையாக பயன்படுத்து வது இல்லை. எனவேதான், நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த, சிறப்பு நீதிமன்ற உள்கட்டமைப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அறிவுசார் சொத்துரிமை தகராறு குறித்த வழக்கு களை விசாரிப்பதற்கான அதிகார வரம்பை மீண்டும் உச்சநீதிமன்றத்திடமே ஒப்படைக்க வேண்டும். நீதித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வழக்கு களை விரைவாக விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.