காமெடி ஆனது பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சமாளிக்க திறன் இல்லாமல் பாஜக, தேவகவுடாவின் மத ச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி (ஜேடிஎஸ்) அமைத்து மக்களவை தேர்த லை சந்திக்க உள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளி லும், ஜேடிஎஸ் 5 தொகுதிகளிலும் போட்டி யிட உள்ளன. அதன்படி ஹாசன், மாண்டியா, கோலார், பெங்களூரு புறநகர் மற்றும் தும்கூர் ஆகிய தொகுதி கள் ஜேடிஎஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. ஜேடிஎஸ் கட்சிக்கு பாஜக 5 தொகுதி களை ஒதுக்கினாலும், அதில் ஒரு தொகு தியை (தும்கூர்) பாஜக வேட்பாளருக்கு ஒதுக்கியுள்ளது. அதாவது தும்கூரில் பாஜக வேட்பாளர் களமிறங்குவாராம், ஆனால் அவர் ஜேடிஎஸ் கட்சியின் சின்னமான “பெண் விவசாயி” சின்னத் தில் போட்டியிடுவாராம். அதே போல பெங்களூரு புறநகர் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் களமிறங்கினாலும், அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவாராம். இந்த நிலையை மாப்பிள்ளை அவரு தான். சட்டை என்னது. என்பது போல வேட்பாளர் அவங்க ஆளு, சின்னம் என் னோடது என்று கூறுவது போல்உள்ளது.
மோடி அரசின் தாக்குதலுக்கு பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் பகுதி 200 விவசாய அமைப்பு கள் தில்லியில் போராட்டம் நடத்து வதற்காக ஹரியானா - தில்லி எல்லை யில் கடந்த ஒரு வார காலமாக முகா மிட்டுள்ளனர். வழக்கம் போல போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய மோடி அரசு மற்றும் பாஜக ஆளும் ஹரியானா அரசு விவசாயிகள் மீது தொடர் தாக்கு தலை நடத்தி வருகின்றனர். கடந்த புதனன்று கானோரி எல்லை யில் ஹரியானா காவல்துறை நடத்திய ரப்பர் குண்டு தாக்குதலில் பஞ்சாப்பைச் சேர்ந்த இளம் விவசாயியான சுபாகரன் சிங் (21) உயிரிழந்தார். இந்த சம்பவத் தால் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அர சுக்கும், பாஜக ஆளும் ஹரியானா அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், உயி ரிழந்த விவசாயி சுபாகரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமும், அவரது சகோதரிக்கு அரசு வேலையும் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் பக வந்த் மான் அறிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய சட்ட நட வடிக்கையும் எடுக்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.