states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

துர்கா பூஜை கொண்டாட்டத்தின் பொழுது மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள உணவகங்கள் 6 நாட்களில் ரூ.1,100 கோடி அளவில் சம்பாதித்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆன்லைன் டெலிவரி ஊழியர் சுமித் சர்மா வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சுமித் சர்மாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். ஆனால் பாலியல் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது தொடர்பாக நொய்டா போலீசார் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. சுமித் சர்மா காலில் பலத்த காயத்துடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். ஒருவேளை தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர் எம்எல்சி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் என மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 120 பேர் கொண்ட இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக் குழு ஞாயிறன்று கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டி பாஜக பேரம் பேசிவருவதாக தகவல் வெளிக்கியுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து காங்கிரஸ் மேலிடம் மட்டுமே முடிவு செய்யும். அமைச்சரவை மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என  அம்மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை சில்மிஷம் செய்தததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில், சிறுமியின் நண்பர்களாக கூறப்படும் 2 மாணவர்கள் ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாணவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னரே குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி யுள்ளது. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாண வர்களுக்கு 15 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜம்மு - காஷ்மீர் காவல்துறை அதிகாரி யான மஸ்ரூர் அகமது வானி, ஈத்கா மைதா னத்தில் உள்ளூர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளை யாடிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுடப்பட்டு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.