states

img

காவித்துண்டு போட்டு எந்த குற்றம் செய்தாலும் பாஜக காப்பாற்றி விடும்!

புதுதில்லி, ஜன.5- “மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே-வை நான் வணங்குகிறேன்” என்று பேசி சாமியார் காளிசரண் மகராஜ் கைது செய்யப்பட்டதை, பாஜக தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியா கண்டித்திருந்தார். “நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு வுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்துப் போராடிய உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் கைதும் செய்யப்பட்டனர். அப்போது, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் இடதுசாரி தலைவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். மாணவர் களின் முதுகில் தட்டிக் கொடுத்தனர்.. அப்போது மட்டும் ஏன், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் விஜய் வர்க்கியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிருந்தா காரத் பதிலடி கொடுத்துள்ளார். “காந்திஜியின் கொலையாளிகளை பாஜக மற்றும் சங்பரிவார் போற்றி பாராட்டும் என்பது தெரிந்த விஷ யம்தான். ஆனால், அவர்களை பாதுகாக்க பாஜக தலை வர்கள் என்ற கேடயத்தை பயன்படுத்துவதுதான் நாட்டின் உச்சக்கட்ட சோகம். இந்த காவித் துண்டு, அனைத்து அரசியலமைப்பு விரோத, தேச விரோத சக்திகளையும் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஏன், உங் கள் கழுத்தில் காவித் துண்டு மட்டும் அணியுங்கள். அதன் பிறகு நீங்கள் சட்டத்திலிருந்து தானாகவே விடுபட்டு விடு வீர்கள். நீங்கள் என்ன குற்றம் செய்தாலும் சரி, கழுத்தில் காவி துண்டு மட்டும் போட்டுக் கொள்ளுங்கள், உடனே உங்களை காப்பாற்ற பாஜக வந்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.