புதுதில்லி, செப். 6 - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலை, நரேந்திர மோடி அரசு இன்னும் வெளியிடாத நிலையில், கூட்டத் தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சி கள் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால், மக்கள் நலன் சார்ந்த -பிரச்சனைகளை அரசு விவா தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி க்கு, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை நடத்தவுள்ளதாக ஒன்றிய அரசு கடந்த வாரம் அறி விப்பு வெளியிட்டது. எனினும், இந்தக் கூட்டத்தொடரில் விவாதத்தி ற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள பிரச்சனைகள், மசோதாக்கள் குறித்த எந்த தகவலையும் வெளி யிடவில்லை. எனினும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, ‘பொது சிவில் சட்டம்’ குறித்து, மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று அனுமானங்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற வியூகக்குழு, சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்தில் கூடி விவாதித்தது.
இதைத்தொடர்ந்து சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “செப்டம்பர் 18, 2023 இல் தொடங்கி ஐந்து நாள் நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நீங்கள் கூட்டியுள்ளீர்கள். மற்ற அர சியல் கட்சிகளுடன் எந்த ஆலோச னையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது என் பதை நான் சுட்டிக்காட்டவேண்டும். அதன் நிகழ்ச்சி நிரல் பற்றி எங்களில் யாருக்கும் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தெல்லாம், ஐந்து நாட்களும் அர சாங்க வேலைக்காக ஒதுக்கப் பட்டிருப்பதாக மட்டுமே. நாங்கள் நிச்சயமாக சிறப்பு அமர்வில் பங் கேற்க விரும்புகிறோம், ஏனெனில் இது பொது அக்கறை மற்றும் முக்கி யத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்ப, எங்களுக்கு வாய்ப் பளிக்கும். குறிப்பாக, இந்தப் பிரச்சனை கள் பற்றிய விவாதத்திற்கு உரிய விதிகளின் கீழ் நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இல்லத்தில் கூடி விவாதித்தது. இதைத்தொடர்ந்து சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “செப்டம்பர் 18, 2023 இல் தொடங்கி ஐந்து நாள் நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நீங்கள் கூட்டியுள்ளீர்கள். மற்ற அர சியல் கட்சிகளுடன் எந்த ஆலோச னையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது என் பதை நான் சுட்டிக்காட்டவேண்டும். அதன் நிகழ்ச்சி நிரல் பற்றி எங்களில் யாருக்கும் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தெல்லாம், ஐந்து நாட்களும் அர சாங்க வேலைக்காக ஒதுக்கப் பட்டிருப்பதாக மட்டுமே. நாங்கள் நிச்சயமாக சிறப்பு அமர்வில் பங் கேற்க விரும்புகிறோம், ஏனெனில் இது பொது அக்கறை மற்றும் முக்கி யத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்ப, எங்களுக்கு வாய்ப் பளிக்கும். குறிப்பாக, இந்தப் பிரச்சனை கள் பற்றிய விவாதத்திற்கு உரிய விதிகளின் கீழ் நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
1. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் களின் துயரம் ஆகியவற்றுடன் தற்போதைய பொருளாதார நிலைமை.
2. விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக அவர் களுக்கு இந்திய அரசு அளித்த உறுதிமொழிகள்.
3. அதானி வணிகக் குழுவின் பரி வர்த்தனைகளை குறித்த அனை த்து குற்றச்சாட்டுக்களையும் விசா ரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு வை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை.
4. மணிப்பூர் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் வேதனை மற்றும் அம்மாநிலத்தில் சீர்குலைந்துள்ள அரசிய லமைப்பு இயந்திரம் மற்றும் சமூக மோதல்கள்.
5. ஹரியானா போன்ற பல்வேறு மாநி லங்களில் அதிகரித்து வரும் மத ரீதியிலான பதற்றம்.
6. இந்திய நிலப்பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவது லடாக் மற்றும் அருணாச் சல பிரதேச எல்லையில் நமது இறையாண்மைக்கு சவாலாக இருக்கும் விவகாரம்.
7. சாதி வாரி மக்கள் தொகை கணக் கெடுப்புக்கான அவசர தேவை.
8. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு களின் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்.
9. சில மாநிலங்களில் ஏற்பட்ட தீவிர வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய வற்றால் ஏற்படும் இயற்கை பேரி டர்களின் தாக்கம்” -ஆகியவை யாகும். ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு உணர்வின் அடிப்படையில், இந்த பிரச்சனைகள் எதிர்வரும் சிறப்பு அமர்வில் விவாதத்திற்கு எடுக்கப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.