states

தில்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மசோதாவைத் தாக்கல் செய்தது மோடி அரசு!

புதுதில்லி, ஆக. 1 - தில்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல் கள் தொடர்பான விஷயங்களில், ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங் கும் புதிய சட்ட மசோதாவை உள் துறை இணையமைச்சர் நித்யான ந்தராய், கடும் எதிர்ப்புக்கு இடை யே செவ்வாயன்று மக்களவையில் தாக்கல் செய்தார். தில்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரி களை நியமிக்கும் அதிகாரம் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சுக்கா, அல்லது துணைநிலை ஆளு நருக்கா? என்ற சிக்கல் எழுந்த நிலை யில், இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி ஆம் ஆத்மி அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி கள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, பி.எஸ். நர சிம்மா ஆகியோர் அடங்கிய அர சியல் சாசன அமர்வு, “தில்லி யூனி யன் பிரதேசத்தின் நிர்வாகச் சேவை களில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கே அதிகாரம்” என்றும், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்ச ரவை குழுவின் ஆலோசனைகளு க்கு கட்டுபட்டவரே ஆளுநர்” என்றும் கடந்த மே 11 அன்று தீர்ப்பு வழங்கியது.

“ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கைகளிலேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். அதனால்தான், தில்லி மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகை யில், தில்லி சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்க ப்பட்டுள்ளது. அதிகாரிகளை கட்டு ப்படுத்தும் அதிகாரத்தைத் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளின் கை யில் கொடுக்கவில்லை என்றால்  அது பெரும் சிக்கலை உருவாக் கும். ஜனநாயக முறைப்படி  தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரி கள் இல்லை என்றால், அது அந்த அரசின் மீதான நம்பகத்தன்மை யை கேள்விக்கு உள்ளாக்கும். ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அமைச்சரின் உத்தர வுகளுக்கு கட்டுப்படவில்லை என் றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கையில் ஆபத்து ஏற் பட்டு விடும். தில்லி அரசு அதிகாரி கள் மீது அதிகாரம் செலுத்த தில்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு” என்று தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், உச்சநீதிமன்ற அரசி யல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப் பையும் மீறி, ஒன்றிய பாஜக அர சானது, “தில்லி அரசின் ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் மற்றும் தில்லி, அந்த மான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர்  ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த தில்லி அதிகாரி கள் நியமனம் மற்றும் மாறுதல் விவ காரத்தில் பரிந்துரை செய்வதில் ஒன்றிய அரசுக்கே அதிகாரம்” என்று அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு அனைத்து அர சியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தில்லி ஆம் ஆத்மி அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இதனிடையே, அவசரச் சட்ட த்தை நிரந்தரச் சட்டமாக்கும் வகை யில், புதிய சட்ட மசோதாவை, உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் செவ்வாயன்று  மக்களவையில் தாக்கல் செய்தார்.  இந்த மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் கடும்  எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், நாட்டின் கூட்டாட்சி முறையை குழிதோண்டி புதைக்கக் கூடியது இந்த மசோதா. ஒரு மாநிலத்தின் இறைமையை மூர்க்கமாக அத்து மீறக் கூடியது. இதனைக் கடுமை யாக எதிர்க்கிறோம் என்றார். என். கே. பிரேமசந்திரன், சசி தரூர் உள்ளி ட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, “தில்லி நிர்வாகம் தொடர்பான மசோதாக்களை நிறை வேற்ற இந்த அவைக்கு அரசிய லமைப்பு அதிகாரம் வழங்கி உள் ளது” என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தில்லி நிர்வா கம் தொடர்பாக நாடாளுமன்றம் எந்தச் சட்டமும் கொண்டுவரலாம் எனவும் நீதிமன்றமும் அனுமதி த்துள்ளது. இம்மசோதாவுக்கு எதிரான காரணங்கள் அனைத்தும் அரசியல் ரீதியானவைகளே ஆகும். எனவே, அனைவரும் இம்மசோதாவை கொண்டுவர அனுமதிக்க வேண்டும்” என்றார்.