‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 17 அன்றும் இரண்டாம் பாகம் ஜனவரி 23 அன்றும் வெளியிடப்பட்டன. 2002 குஜராத் வன்முறையில் அன்றைய முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடித்தொடர்பு இருந்தது என்பதை உரிய ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
200 ஆண்டுகளில் இல்லாத சோகம்
மோடியையோ, அவரது அரசையோ அல்லது அவரது கட்சியையோ விமர்சிக்கும் எதையும் அழிக்கும் நிலையில் ஒன்றிய அரசு உள்ளது. இந்தியர்களுக்கு இப்போது அந்த ஆவணப்படம் கிடைக்கவில்லை. ஆனால் அதில் உள்ள ஆதாரங்களைப் பாருங்கள். இங்கிலாந்தின் முன்னாள் வெளி விவகார செயலாளரும், இங்கிலாந்து அரசாங்கத்தில் அமைச்சர் மட்டத்தில் உள்ளவர்களும் பேசுகின்றனர். இதை துடைத்தெறிய ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. இது வெறும் செய்தி தணிக்கை அல்ல. ஊடகங்கள் ஏற்கனவே சுய தணிக்கை செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஊடகங்களிடம் எதையும் செய்யுமாறு அரசாங்கம் கூற வேண்டிய அவசியமில்லை. ஊடகங்களே அத்தகைய செய்திகள் வெளிவர அனுமதிப்பதில்லை. அதுதான் மிகப்பெரிய சோகம். கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பத்திரிகைத் துறை தற்போது மோசமான நிலையில் உள்ளது.
- பி.சாய்நாத், மூத்த பத்திரிகையாளர்
புதுதில்லி, ஜன. 23 - குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி க்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படத்தை முடக்குவதற்கு, ஒன்றிய பாஜக அரசு அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும், இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தடைகள் மூலம் நரேந்திர மோடி யின் இரத்தக்கறை படிந்த கரங்களை மறைத்து விட முடியாது என்றும் எதிர்க் கட்சிகள் சாடியுள்ளன.
‘மோடிக்கான கேள்விகள்’
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது, இஸ்லாமியர் களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட மத வன்முறைகள் தொடர்பாக, பிபிசி செய்தி நிறுவனம், ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்ட, இந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்டது. 2002 குஜராத் வன்முறையில் அன்றைய முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடித்தொடர்பு இருந்தது என்பதை உரிய ஆதாரங் களோடு எடுத்துக் காட்டும் வகையில், இந்த ஆவணப்படம் இருந்ததாக கூறப் படுகிறது. குறிப்பாக, “2002-ஆம் ஆண்டு பிப்ர வரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம் பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் உயிரி ழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2 ஆயிரத்து 500 பேர் படு காயம் அடைந்தனர்” என்று 2005-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை துவங்கி, இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா கூறிய கருத்துக்கள், குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசுவோ ரின் வீடியோக்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த தாக தெரிகிறது.
சிறுபான்மை சமூகத்தை இந்துத்து வா வன்முறைக் கும்பல்களிடம் இருந்து பாதுகாக்க, காவல்துறை மூலம் மோடி போதிய நடவடிக்கை எடுக்க வில்லை; இந்துத்துவா தீவிரவாதி களுக்கு மோடி மறைமுகமாக உதவினார் என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், மோடியின் அப்போதைய நடத்தை குறித்து, மேற்கத்திய நாட்டு தலை வர்கள் வைத்த விமர்சனங்கள், அதிலும், “குஜராத் கலவரம் ஒரு இன அழிப்புக் கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது” என்று பிரிட்டிஷ் அரசாங்கமே பகிரங்கமாக வைத்த குற்றச்சாட்டு - போன்ற ஆவணங்களும் வெளியாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிபிசி ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 17 அன்று இங்கி லாந்தில் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தி யாவில் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் அதன் உள்ளடக்கம் மற்றும் அங்கீ கரிக்கப்படாத வீடியோ கிளிப்புகள், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் மூலம் சமூக ஊடகங் களில் பகிரப்பட்டன. பிபிசியின் இந்த ஆவணப்படம் குஜராத் மதவன்முறை தொடர்பான விவரங்களையும், அதில் பிரதமர் மோடிக்கு இருக்கும் நேரடியான தொட ர்பு பற்றிய விவாதங்களையும் மீண்டும் அரங்கிற்கு கொண்டு வந்தது.
பாஜக பதற்றம்
இதனை எதிர்பாராத ஒன்றிய அரசும், பாஜகவினரும் பதற்றம் அடைந்தனர். வழக்கம்போல எதிர்ப்பு தெரிவிக்கவும் ஆரம்பித்தனர். 2024 மக்களவைத் தேர்த லுக்கான பணிகளை துவங்கவிருந்த பாஜக-வுக்கு குஜராத் மதவன்முறை தொடர்பான பிபிசி ஆவணப்படம், போன தலைவலி மீண்டும் வந்தது போலானது. அத்துடன், ஆவணப்படத்தின் இரண் டாம் பாகம் ஜனவரி 23 அன்று வெளி யாகும் என்று கூறப்பட்டிருந்ததால், பிபிசி-யின் ஆவணப்படத்தை முடக்கும் வேலையில் மோடி அரசு இறங்கியது. மோடி குறித்து அவதூறு செய்யும் வகையில் பிபிசி ஆவணப்படம் இருப்ப தால் அதனை யூடியூப் உள்ளிட்ட வலை தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று வாய்மொழியாக மிரட்டல் விடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கி னர். இதனால், இந்த ஆவணப்படம் சில வலைதளங்களில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் நீக்கம்
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021- இன் விதி 16-இன் கீழ் அமைச்சகம் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்ததாக கூறப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படாமலேயே வெளியான இந்த தடைக்கு இணங்கி யூடியூப் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வீடியோ மற்றும் டுவீட்களின் இணைப்பு களை நீக்கின. “சிறுபான்மையினர், அல்லது இந்தி யாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும் நேர்மறையாக முன்னேறி வருகிறது. இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் தொடங்கப்படும் தீங்கிழைக்கும் பிரச்சா ரங்களால் இந்தியாவின் பிம்பத்தை இழிவுபடுத்த முடியாது. பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi) ஜியின் குரல் 1.4 பில்லியன் இந்தியர்களின் குரல்” என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதறினார்.
“இந்த ஆவணப்படம் அதை உருவாக்கிய ஏஜென்சியின் பிரதிபலிப்பு. இதுவொரு குறிப்பிட்ட, மதிப்பிழந்த கதையை முன்வைக்க வடிவமைக்கப் பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ( A Piece of Propaganda) நாங்கள் பார்க்கிறோம்” என்று இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் கூறியது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப் பிற்கு உட்படுத்துகிறது” என்ற அடிப்படையில் மோடி ஆவணப்படத் தின் கிளிப்புகளை ஒளிபரப்பிய டஜன் கணக்கான கணக்குகளை டுவிட்டர் மற்றும் யூடியூப் நீக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள் ளது” என்று வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் கஞ்சன் குப்தா சமாளித்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
மறுபுறத்தில், பிபிசி ஆவணப்படத்திற்கான இந்திய ஒன்றிய அரசின் தடை சட்டவிரோத மானது என்று ‘இணைய சுதந்திர அறக்கட்டளை’ (Internet Freedom Foundation) உள்ளிட்ட அமைப்புக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தை மோடி அரசுக்குத் தெரிவித்தனர். யூடியூப் வீடியோக்கள் மற்றும் டுவீட்களை அகற்றுவதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கை யைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பிரதமரும் அவருடைய ஆதரவாளர் களும் அவரைப் பற்றிய பிசிசி ஆவணப்படத் தை அவதூறானது என்று கூறுகின்றனர். தடையும் விதித்துள்ளனர். அப்படியானால், (ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ற வகையில்) அத் வானியின் ராஜினாமா வலியுறுத்தப்படாமல் இருக்க, 2002-இல் பிரதமர் வாஜ்பாய் ஏன் வெளி யேற விரும்பினார் வாஜ்பாய் ஏன் அவருக்கு (நரேந்திர மோடிக்கு) ‘ராஜ தர்மத்தை’ நினைவு படுத்தினார்?” என்ற கேள்வியை முன்வைத்தார். காங்கிரசின் மற்றொரு தலைவரான கே.சி. வேணுகோபால் எம்.பி. “21 ஆண்டுகளுக்குப் பிறகும் 2002-ஆம் ஆண்டில் நடந்ததைப் பற்றி வெளியாகும் உண்மை குறித்து நரேந்திர மோடி இன்னும் பயப்படுகிறார். படுகொலைக்கு அவர் மீது குற்றம் சாட்டும் பிபிசி ஆவணப்படம் தடைசெய்யப்பட்டு உள்ளது, இது ஒரு கோழைத்தனமான, ஜனநாயக விரோதச் செய லாகும், இது மோடியின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று சாடினார்.
“ஒரு மணி நேர ஆவணப்படம் ‘பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மையினரை எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்துகிறது’. லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்ற எனது #பி.பி.சி ஆவணப்படத்தின் டுவீட்டை தணிக்கை என்ற பெயரில் @Twitter @TwitterIndia நீக்கி யுள்ளது. எதிர்கட்சிகள் நல்ல போராட்டத்தை (sic) தொடரும்” என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார். “காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேவை வணங்கும் மற்றொரு திரைப்படம் தடையின்றி வெளியிடப்படும்போது மோடி குறித்த ஆவணப்படம் ஏன் தடுக்கப்படுகிறது” என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார்.
‘பிளாக் இன் இந்தியா’
“இந்திய அரசிடம் ‘பிளாக் இன் இந்தியா’ என்ற திட்டம் உள்ளது. பிபிசியின் தலைமையகம் இந்தியாவில் எங்காவது இருந்திருந்தால், மோடி அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லபா தெரிவித்துள் ளார்.
‘நிரந்தரமான’ அவசர நிலையா?
இதேபோல, பிபிசி ஆவணப்படத்தை தடுப் பதற்கு இந்திய அரசு அவசர காலச் சட்டங் களைப் பயன்படுத்தி இருப்பது சட்டவிரோதம் என்று ‘இணைய சுதந்திர அறக்கட்டளை’ (Inter -net Freedom Foundation), சாடியுள்ளது. அவசரகால நடவடிக்கை என்று கூறி இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், “‘அவசரநிலை’ என்பது நிரந்தரமானது அல்ல. அத்தகைய உத்தரவுகளை எதிர்த்து வழக்காட குடிமக்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், ஆனால் உத்தரவுகள் பொதுவில் வெளியிடப்படாவிட்டால் அவ்வாறு செய்ய முடி யாது. ஷ்ரேயா சிங்கால் மற்றும் அனுராதா பாசின் வழக்குகளில் கூறப்பட்ட தீர்ப்புகளின் படி அத்தகைய உத்தரவுகளை பொது வெளியில் வெளியிடவேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், சில விஷயங்களுக்கு மட்டும் பத்தி ரிகை அறிக்கைகள் வெளியிடுவது, அதிலும் யார் அதை வெளியிடுகிறார் எனப் பெயர் குறிப் பிடப்படாமல் வெளியிடுவது போன்ற நடை முறைகள், ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையை காட்டுகின்றன. இது தகவல்களை அணுகும் குடி மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது” என்று இணைய சுதந்திர அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தும் உல களாவிய பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், இந்தியா கடந்த ஆண்டு 8 இடங்கள் சரிந்து 150- ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.