உத்தரப்பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் கடந்த 2006 அக்டோபர் 12 அன்று அஞ்சலி என்ற இளம்பெண் காணாமல் போனார். அதே காலக்கட்டத்தில் பல சிறுமிகளும் காணாமல் போயினர். போலீ சார் விசாரணைக்குப் பிறகு தொழி லதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் என் பவரின் வீட்டில் அஞ்சலி வேலை செய்தது தெரிந்தது. அதன்பின்னர் மொகிந்தர் சிங் வீட்டில் உதவி யாளராக இருந்த சுரேந்திர கோலி என்பவரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டதில் மொகிந்தர் வீட்டின் பின்புறம் சில மண்டை ஓடுகள் கிடைத்தது. அவற்றில் ஒன்று அஞ் சலியுடையது என்பது டிஎன்ஏ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. நாடுமுழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த சம்ப வத்தில் மொகிந்தர், சுரேந்தர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, சாட்சியங்களை அழித்தல் உட்பட பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டது. அஞ்ச லியை பாலியல் வன்கொடுமை மற் றும் கொலை செய்தது தொடர்பான வழக்கில் காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-இல் மொகிந் தர், சுரேந்தர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், போதிய ஆதா ரங்கள் இல்லை எனக் கூறி தொழில திபர் மொகிந்தர் சிங் மற்றும் சுரேந் திர கோலியை விடுதலை செய்வ தாக அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பு வழங்கியது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.