states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள்  சுட்டுக் கொலை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத் தில் உள்ள அவந்திபோரா வின் டிரால் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு - காஷ்மீர் காவல் துறை, மத்திய ரிசர்வ் காவல் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் துவங்கின.   இந்த நடவடிக்கையின் போது வியாழ னன்று அதிகாலை மூன்று பயங்கரவாதி கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

இ-பாஸ்போர்ட் அமல்

இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய இ-பாஸ் போர்ட் பயன்பாட்டை அமலு க்கு கொண்டுவந்துள்ளது வெளியுற வுத்துறை.  இ - பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத் தில் சிப், ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிப்பட்ட தரவுகள், கை ரேகை, முகத் தின் தரவு ஆகியவை ‘டிஜிட்டல் என் கிரிப்ஷன்’ முறையில் பதிவு செய் யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபரங்களை திருடவோ, மாற்றவோ முடியாது. இதனால் போலி பாஸ்போர்ட் மோசடிகள் தடுக்கப்படும் எனவும் விமான நிலையங்களில் பாஸ் போர்ட் சரிபார்ப்பு நேரம், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.