ஹைதராபாத், ஏப்.11- “இந்தியாவில், ஆங்கிலத் திற்குப் பதிலாக இந்தியை மக்கள் ஏற்க வேண்டும்; பல்வேறு மாநில மக்களும் தங்களுக்குள் இந்தி மொழியிலேயே பேச வேண்டும்” என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசி யல் கட்சிகளைத் தொடர்ந்து, தெலுங்கானாவின் ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் அமித்ஷா-வின் பேச்சைக் கண்டித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி. ராமாராவ் இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதி விட்டுள்ளார். அதில், “அன்புள்ள அமித் ஷா அவர்களே, மொழிப் பேரினவாத மும் மேலாதிக்கமும் ஒரு பூமா ராங். வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம். பல மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். என்னால் என்னு டைய தாய்மொழி தெலுங்கிலும், ஆங்கிலம், இந்தியிலும் பேச முடியும். கொஞ்சம் உருது மொழி யும் தெரியும். ஆனால், ஆங்கி லத்துக்கான முக்கியத்துவத் தைக் குறைத்து இந்தியை திணிக்கும்போது இந்திய இளை ஞர்கள் உலகளாவிய வாய்ப்பு களை பெறுவதில் தவறி விடு வார்கள்” என்று குறிப்பிட்டுள் ளார்.