புதுதில்லி, அக். 3 - சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியானது, 2023 செப்டம்பரில் ரூ. 1.62 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டில் 4-ஆவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.60 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதில், பெரிய மாநிலங்களான மகாரா ஷ்டிரா ரூ. 25 ஆயிரத்து 137 கோடி (17 சத விகிதம்) கர்நாடகா ரூ. 11 ஆயிரத்து 693 கோடி (20 சதவிகிதம்), குஜராத் ரூ. 10 ஆயி ரத்து 129 கோடி (12 சதவிகிதம்) என கடந்த 2022 செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அதிக வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. இதில் தமிழ்நாடு ரூ. 10 ஆயிரத்து 481 கோடியுடன், மேற்கண்ட 3 மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக- 21 சதவிகித வரி வசூல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. செப்டம்பரில் மொத்தம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,62,712 கோடியில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 29,818 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியாகவும் உள்ளது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,623 கோடி, செஸ் ரூ. 11,613 கோடியும் அடங்கும்.