தமிழ்நாடு சட்டப்பேரவை அக். 14ல் கூடுகிறது! பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 அன்று துவங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாயன்று (செப்.23) செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலை வர் மு. அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், அக்டோபர் 14 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்ட மன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்” என்றார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். அதில், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யப் படும். கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த வால்பாறை தொகுதி அதிமுக உறுப்பினர் அமுல் கந்தசாமி உட்பட மறைந்த 8 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றும் அவர் கூறினார்.
