புதுதில்லி, மே 16 - மக்கள் படம் பார்க்க வராததா லேயே, தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையரங்குகள் அகற்றி விட்டதாகவும், பார்வை யாளர்களை அதிகரிக்க அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்கு நர் சுதிப்தோ சென் இயக்கத்தில், அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் மே 5 அன்று திரைக்கு வந்தது. கேரளத்தைச் சேர்ந்த 4 பெண்கள், கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குவதாகவும், அவர்களில் முஸ்லிமாக இருக்கும் ஒரு பெண், மற்றவர்களை மூளைச் சலவை செய்து, முஸ்லிமாக மத மாற்றம் செய்வதாகவும், பின்னர் அவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐ எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புக் காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதும்தான் இத்திரைப் படத்தின் மையக்கருத் தாகும். இவ்வாறு, கேரளத்தைச் சேர்ந்த 32 ஆயிரம்பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டு இருப்ப தாகவும் ஒரு பொய்யான பிரச்சாரத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ முன்வைத்தது. எனவே, இதற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டங்கள் நடைபெற்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் பல ரும் கண்டனங்களைத் தெரிவித்த னர்.
இந்நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை நிறுத்துவ தாக, கடந்த 7-ஆம் தேதி திரையரங்கு கள் தரப்பிலேயே அறிவிப்பு வெளி யிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், இந்தப் படத்தைத் திரை யிடுவதற்குத் தடை விதித்து, அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜி மே 8-ஆம் தேதி உத்தரவிட்டாா். மறுபுறத்தில், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநி லங்களில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. இதனால், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், இது வரை 147 கோடியே 04 லட்சத்தை வசூல் செய்தது. இதனிடையே, தங்கள் படத்திற்கு மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என படத்தின் தயாரிப்பா ளர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கடந்த மே 12 அன்று இந்த மனுவை விசார ணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மே 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு, மேற்குவங்க அரசுகளுக்கு உத்தர விட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பர்திவாலா அமர்வில் மே 16 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அதில், “பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைத் திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்” என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது. “’தி கேரளா ஸ்டோரி’ திரைப் படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கவில்லை. 19 திரையரங்கு களில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ள னர். மேலும், படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போது மான வரவேற்பின்மை ஆகிய வற்றால், திரையரங்கு உரிமை யாளர்களே 7-ஆம் தேதி தொடங்கி திரையிடுவதை நிறுத்திக் கொண்ட தாக தோன்றுகிறது. திரையரங்கு களுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர் களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது. எனவே, மனுதாரர் விளம்பரம் தேடும் நோக்கில் மனு தாக்கல் செய்துள்ளதால், அப ராதத்துடன் அவரது மனுவை தள்ளு படி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.