குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் வெளிப்பட்ட வெறுப்புக்கு பதிலடி கிரிக்கெட்டில் மீண்டும் சகோதர உணர்வை மலரவிட்ட தமிழ்நாடு ரசிகர்கள்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரின் 22-ஆவது லீக் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் திங்களன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி எளிதாக வீழ்த்தியது. கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன் அணியும், பலமான அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அணியை போதிய அனுபவம் இல்லா இளம் அணியான ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்றாலும், அதிர்ச்சியை விட தமிழ்நாட்டு ரசிகர்களின் நாடு கடந்த ஆதரவு விளையாட்டு உலகில் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு ரசிகர்களை கண்டு நெகிழ்ந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வீரர்கள், ரசிகர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது 3-ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது. குஜராத் மாநிலம் அக மதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 99.9% அளவில் (தோராய மாக) இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தான் ரசிகர்கள் யாரும் இல்லை. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா மறுப்பா? இல்லை பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் கிரிக்கெட் சங்கம் மத வெறுப்பால் பாகிஸ்தான் ரசிகர்களை மைதானத்தில் அனு மதிக்க மறுத்துவிட்டார்களா? என பலத்த சந்தேகம் எழுந்தது. தங்கள் நாட்டு ரசிகர்கள் இல்லாமல் பாகிஸ் தான் அணி பரிதாப நிலையில் விளை யாடியது. இதனால் பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடும் போது பிரம்மாண்ட ஆதரவு அளிக்க தமிழ்நாடு ரசிகர்கள் முன்கூட்டியே சமூக வலை தளங்களில் அறிவித்தனர். அறிவிப்பின் படியே பாகிஸ்தான் - ஆப்கானிஸ் தான் போட்டியின் பொழுது நாடு மற்றும் குஜராத் ரசிகர்களின் மத வேறு பாடின்றி பாகிஸ்தான் அணி ஜெர்சி யுடன் களமிறங்கி தமிழ்நாட்டு ரசிகர்கள் பிரம்மாண்ட ஆதரவு அளித்த னர். திறமைக்கு ஏற்ப ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆதரவு அளிக்க, இதனை கண்ட இருநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் விளையாடுவதை உணர்ந்து, போட்டி முடிந்த பின்னர் இருநாட்டு வீரர்கள், ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பாராட்டுத்தெரிவித்தனர். 1997 மற்றும் 1999 ஆகிய ஆண்டு களில் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது தமிழ்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதர வளித்து சகோதர உணர்வை வெளிப் படுத்தினர். தற்பொழுது மீண்டும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் ரசி கர்களின் வெறுப்புணர்வால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மீண்டும் சகோதர உணர்வை வெளிப்படுத்தி விளை யாட்டு உலகில் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளனர்.
குஜராத் ரசிகர்களுக்கு பாடம் எடுத்த இளம் சென்னை ரசிகர்
சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் பொழுது சென்னை இளம் ரசிகர் ஒருவர்,”பாஜக ஆளும் அகமதாபாத் மைதானத்தில் நடந்த சம்பவம் அருவருப்பை அளிக்க கூடியது. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்திருக்கக் கூடாது. இந்தியாவா பாகிஸ்தானா என்றால் இந்தியாவைத்தான் ஆதரிக்க வேண்டும். அதற்காக பாகிஸ்தானை இப்படி அவமதிக்கக் கூடாது. அவர்கள் நம் நாட்டிற்கு வந்த விருந்தாளிகள். அவர்களை நாம் சரியாக நடத்த வேண்டும். நம்முடைய நாட்டிற்கு வந்த மக்களை இப்படி வேண்டும் என்று அவமதித்து கிண்டல் செய்யக் கூடாது. அது மோசமான குணம். நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நாம் இப்படி நடத்த மாட்டோம் இல்லையா? அப்படித்தான் இதுவும். இன்று நாங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறோம். பாகிஸ்தான் நல்ல அணி. இது கிரிக்கெட். இதில் மதம் அரசியலை கொண்டு வரக்கூடாது” எனக் கூறி குஜராத் ரசிகர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அவர் மிகவும் இளம்வயது என்பதால் அவருடைய பெயரை செய்தியாளர் கேட்கவில்லை.
பாபர்... பாபர்... அதிர்ந்த சென்னை...
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியை போன்று கிரிக்கெட் உலகில் நட்சத்திர அதிரடி வீரர் ஆவார். இவருக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்ய வந்த பொழுது தமிழ்நாடு ரசிகர்கள் பாபர்.. பாபர்.. என கோஷம் எழுப்ப சென்னை சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது.
இந்தியா - பாகிஸ்தான் ஜெர்சிகளுடன் சகோதர உணர்வு கொண்டாட்டம்
பாகிஸ்தான் - ஆப்கானி ஸ்தான் போட்டியின் பொழுது தமிழ்நாட்டு ரசிகர்கள் பலர் இந்தியா - பாகிஸ்தான் ஜெர்சி யை அணிந்து நாங்கள் சகோதரர் கள் எங்களுக்குள் எந்த மோதல் இல்லை என கட்டியணைத்து சகோ தர உணர்வை வெளிப்படுத்தினர்.