states

img

பீகாரில் திடீர் தீ விபத்து

பீகாரில் பயணிகள் ரயிலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலில் எதிர்பாராத விதமா தீ விபத்து ஏற்பட்டது. ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்றபோது ரயில் இன்ஜின் தீ பற்றி எரிய துவங்கியது.  இதையடுத்து துரிதமாக செயல்பட்டு தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டதால் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 
இதையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;