states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஆதாயம் பெறுவதற்காக சட்டங்களையே வளைப்பது, சலுகைகளை அளித்து அதற்கு சன்மானம் பெறுவது என்ற பாரதிய ஜனதா கட்சி யின் கேடுகெட்ட நடவடிக்கையை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது. பெயர் சொல்லாமல், தொகை சொல்லாமல் இவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பெருமளவு நன்கொடை நிதிதான், பெரும் கார்ப்ப ரேட் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்ப தற்கான - தங்களது கூட்டுக்களவாணிகளுக்கு ஆதரவாக கொள்கைகளை உருவாக்குவதற்கான அடிப்படைக் காரணியாக இருந்திருக்கிறது. இந்தக் கொள்கைகள்தான் நாட்டின் சிறு-குறு தொழில் நிறுவனங்களையும் மற்றவர்களையும் குப்புறத் தள்ளி நிர்மூலமாக்கியது. தேர்தல் பத்திரங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டது முதல் ரூ.16ஆயிரம் கோடி பத்திரங்கள் விற்கப்பட்டன. இதில் பெருமளவு விழுங்கியது பாஜகவே!