நீதிபதிகள் நியமனம் தொடர் பாக ஒன்றிய பாஜக அரசு கொலீஜி யம் உத்தரவை அமல்படுத்தாமல் இழுத்தடித்தால், ஒன்றிய சட்டம் மற் றும் நீதி அமைச்சகத்தின் மீது நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்க ளூரு வழக்கறிஞர்கள் சங்கம் மற் றும் பொதுநல வழக்குகளுக்கான லாப நோக்கற்ற மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நவம்பர் 7 அன்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஆஜரானார். அவரிடம், “வழக்கறிஞர்கள் நீதிபதி பதவியை பொறுப்புணர்வு டன், சமூகத்திற்கான பங்களிப்பா கக் கருதி ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், கொலீஜியம் பரிந்துரை க்கும் பெயர்களில் ஒன்றிய அரசு ‘குறிப்பாக’ சிலரை ‘பிரித்தெ டுத்து’ நியமனம் செய்கிறது. கொலீ ஜியம் ஐந்து வழக்கறிஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்த நிலையில், முன்மொழியப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது பெயர்களை புறக்க ணித்து, ஏனைய மூன்று பெயர் களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத் தில் செய்யப்பட்ட வேறு சில நிய மனங்களும் இந்த முறையிலேயே நடந்துள்ளது. இது வெற்றிகரமான வழக்கறிஞர்களை நீதிபதி பணிக்கு கொண்டுவருவதற்கு உதவாது. இந்த நடைமுறையை நிறுத்து மாறு திட்டவட்டமாக கேட்டுக் கொள்கிறோம். அதேபோல நீதிபதிகளின் பணி யிட மாற்றம் தொடர்பான பரிந்துரை களுக்கும் ஒன்றிய அரசு உடனடி யாக ஒப்புதல் அளிக்க வேண்டு மென்பதே எங்களது கருத்தாகும். இந்த விவகாரத்தில், ஒன்றிய அரசு விரும்பாத முடிவை எடுக்க வேண் டிய சூழல் எங்களுக்கு வராதென நம்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.”
14 முன்மொழிவுகளுக்கு இதுவரை பதிலில்லை
இன்றைய நிலவரப்படி, கொலீ ஜியத்தால் இரண்டாவது முறை யாக அல்லது வேறுவிதமாக வலி யுறுத்தப்பட்ட போதிலும் ஐந்து பழைய பெயர்கள் நிலுவையில் உள்ளன; மேலும் 14 புதிய முன் மொழிவுகளுக்கு இதுவரை ஒன் றிய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து, ஒன்றிய அரசி டம் ஆக்கப்பூர்வமாக விவாதித்து, நீதிமன்றத்திற்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்க டரமணி கோரிக்கை விடுத்தார். சட்ட அமைச்சர்- செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டும் விசாரணையின் போது, பொது நல வழக்குகளுக்கான மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அட்டர்னி ஜெனர லின் உத்தரவாதத்தை நம்புவதில் அர்த்தமில்லை என்றும், சட்டத் துறை செயலாளரை அல்லது சட் டத்துறை அமைச்சரை நீதிமன்றத் திற்கு வரவழைக்க வேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச் சனை ஒருபோதும் தீராது என்றும் கூறினார். பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி தாதர், அரசியலமைப்புச் சட்டத்தின் 141-ஆவது பிரிவின் கீழ் உத்தரவு களை பிறப்பிக்குமாறு நீதிமன் றத்தை வலியுறுத்தினார். எனினும், அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்த னர்.