புதுதில்லி, ஜூலை 12- உருளைக் கிழங்கு மீதான தங்க ளின் காப்புரிமை ரத்து செய்யப்பட் டதை எதிர்த்து, ‘பெப்சிகோ’ (PepsiCo) தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை தில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில், ‘பெப்சிகோ’ வுக்கு வழங்கப்பட்ட அறிவுசார் சொத்து பாதுகாப்பையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட பிரபல நொறுக்குத் தீனி மற்றும் குளிர் பானங்கள் தயாரிப்பு நிறுவனம்தான் பெப்சிகோ. உலகம் முழுவதும் தனது வியாபார வலையமைப்பைக் கொண்ட இந்த நிறுவனம் குழந்தை களின் விருப்ப உணவாக மாற்றப் பட்டிருக்கும் ‘லேஸ்’ எனப்படும் உரு ளைக்கிழங்கு சிப்ஸையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்தான், பெப்சிகோ நிறுவனமானது, கடந்த 2019-ஆம் ஆண்டு குஜராத்தில் எப்.சி.5 (‘FC5’) எனப்படும் ஒரு வகை உருளைக் கிழங்கை பயிரிட்ட விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது. எப்.சி.5 என்ற உருளைக் கிழங்கு வகையானது, ‘லேஸ்’ எனப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயா ரிப்புக்காக தாங்கள் பிரத்யேகமாக வளர்க்கும் வகை என்றும், இதற்கான காப்புரிமையை தாங்கள் பெற்றுள்ள நிலையில், குஜராத் விவசாயிகள் அத னைப் பயிரிட்டது காப்புரிமை விதி மீறல் என்றும் தெரிவித்தது. தாங்கள் காப்புரிமை பெற்றுள்ள ‘FL 2027’ உருளைக்கிழங்கு வகை யை, ‘FC5’ என்ற பெயரில் பயிரிட்டி ருப்பதாகவும், இது அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை (IPR) மீறிய குற்றமாகும் என்று கூறி குஜ ராத் விவசாயிகள் மீது, அகமதாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வாறு காப்புரிமை மீறல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 1 லட்சத்து 21 ஆயிரத்து 050 அமெ ரிக்க டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மிரட்டியது. இதனை எதிர்த்து விவசாயிகள் ஆர்வலரான கவிதா குருகாந்தி, தாவர வகைகள் மற்றும் விவசாயி களின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (PPVFR) கடிதம் எழுதினார்.
அதில், “பெப்சிகோ நிறுவனம், ஒரு தனியார் புலனாய்வு நிறு வனத்தை பணியமர்த்தியுள்ளது. அந்த புலனாய்வு நிறுவனம், இந்திய மாநிலமான குஜராத்தில் சில உரு ளைக்கிழங்கு வயல்களுக்குச் சென்று, ‘FL 2027’ வகை உருளைக் கிழங்கை விவசாயிகள் பயிரிடு வதை சோதனையில் கண்டறிந்ததாக கூறுகிறது. ‘FL 2027’ வகை உருளைக் கிழங்கிற்கான காப்புரிமை தன்னிடம் உள்ள நிலையில், தங்களின் அனு மதி பெறாத மாநிலத்தில் இந்த வகை உருளைக் கிழங்கை விவசாயிகள் பயிரிட்டுள்ளதை அனுமதிக்க முடி யாது; FL 2027 வகை உருளைக் கிழங்கை குஜராத் விவசாயிகள் பயிடு வதைத் தடுக்க வேண்டும் என்றும் அகமதாபாத் உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளது; எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி, பெப்சிகோவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக பெப்சிகோ அறிவித்தது. பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்றும் கூறியது.
ஆனாலும், கவிதா குருகாந்தி விடுவதாக இல்லை. “இந்தியச் சட்டம் விதைகள் மீதான காப்புரிமைக்கு அனுமதி அளிக்கவில்லை” என்று கூறி, பெப்சிகோவின் ‘FC5’ உரு ளைக்கிழங்கு வகைக்கு வழங்கப் பட்ட காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் (PPVFR) வலியுறுத்தினார். அதனை ஏற்று, பெப்சிகோ நிறுவனத்திற்கு, ‘FC5’ உருளைக்கிழங்கு வகைக்கு வழங்கப்பட்ட காப்புரிமையை, தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 2021-ஆம் ஆண்டில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து, பெப்சிகோ நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில்தான், லேஸ் உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிப்புக்காக பிரத்யேகமாக வளர்க்கப்படும் ‘FC5’ உருளைக்கிழங்கு வகைக்கான காப்புரிமை ரத்து செய்யப்பட்டதை தில்லி உயர்நீதிமன்றம் செவ்வா யன்று உறுதி செய்துள்ளது. இந்தியா வின் சட்ட விதிகள், விதை வகை களுக்கு காப்புரிமையை அனு மதிக்கவில்லை என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ள நீதிமன்றம், பெப்சிகோ வுக்கு வழங்கப்பட்ட அறிவுசார் சொத்து பாதுகாப்பையும் அதிரடி யாக ரத்து செய்துள்ளது.