சென்னை, மார்ச் 21- ‘சங்கீதம் அனைவருக்கும் சமம்’ என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்கால கர்நாடக சங்கீத வரலாற்றில் பல முற்போக்கான நடவடிக்கை யில் ஈடுபட்டு வருபவர், ‘மகசேசே’ விருது பெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி. எம்.கிருஷ்ணா ஆவார். சாஸ்திரிய மேடைக் கச்சேரிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பாடி, கேட்டு வந்த கர்நாடக சங்கீதத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகை யில் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மார்கழி கச்சேரி களுக்குப் பதில் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா வை‘ முன்னெடுத்தவர். இந்துப் பக்தி பாடல்களே அதிகளவு பாடப் படும் கர்நாடக சங்கீதத்தில் அடித்தட்டு மக்க ளின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’, சென்னையில் உள்ள நீர்நிலைகளின் மாசு குறித்து ‘பொறம்போக்கு பாடல்’, அமைதியை வலியுறுத்தி தலையில் குல்லா அணிந்து கொண்டு கர்நாடக இசை மேடைகளில் இஸ்லாமியப் பாடல்களைப் பாடு வது, கேரள சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு களை உடைத்தெறியப் பாடுபட்ட கேரள மறு மலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் நாரா யண குரு குறித்த பாடல், சாமானியர்கள் பய ணம் செய்யும் ரயில்களில் பாடல் பாடுவது எனத் தொடர்ச்சியாக இசைத்துறையில் முற்போக் கான முன்னெடுப்பிற்காக பலராலும் பாராட் டப்பட்டு வருபவர் டி.எம். கிருஷ்ணா. இந்நிலையில்தான், சென்னை மியூசிக் அகா டமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப் படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம். கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த வருடம் நடைபெற உள்ள 98-ஆவது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டிற்கே டி.எம். கிருஷ்ணா தான் தலைமை தாங்க உள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரு கின்றனர்.
ஆனால், டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்கி நடத்தும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், “பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா பேசியுள்ளார். பெரியார் கருத்துக்களை ஊக்கு விப்பது ஆபத்தானது” என்றும் தங்களின் எதிர்ப்பிற்கான காரணங்களாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஞ்சனி, காயத்ரியின் இந்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மறுபுறம் டி.எம். கிருஷ்ணாவிற்கு ஆதரவையும் வெளியிட்டு வருகின்றனர்.
கனிமொழி எம்பி
அந்த வகையில் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பதிவில் “டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது வழங்கு வதாக அறிவித்திருப்பது இசை சகோதரத்து வத்தின் சில பகுதிகளை உலுக்கி உள்ளது” என்று கூறியுள்ளார். “இந்த வெறுப்பு, சமீபத்தில் கர்நாடகாவில் பாஜக அரசியல்வாதி பேசிய வெறுப்பு நிறைந்த பேச்சைப் போன்றது. நம் நாடு நம்பும் கருத்துச் சுதந்திரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லா மல் இருக்கலாம்” என்றும் கனிமொழி பதி விட்டுள்ளார்.
அகாடமி தலைவர்
இந்த நிலையில் மியூசிக் அகாடமி தலைவர் முரளி, இது விளம்பரத்திற்காக செய்யப்பட்ட எதிர்ப்பு. இந்த விருதை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரஞ்சனி - காயத்ரி இருவரும் தேவையில்லாத பிரச்சனை யை உருவாக்க வேண்டும் என்றும் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றும் கடுமையான பதில் விமர் சனங்களை முன்வைத்துள்ளார்.