புதுதில்லி,ஜன.8- கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் அதற்கான மையத்திற்கு சென்று முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மருத்து வத் துறையினர், முன்கள பணியாளர் கள், இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தடுப்பூசி செலுத் திக்கொள்ள அரசு அறிவுறுத்தியிருந்தது.மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை கூறியிருந்தது. இந் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத் திக்கொள்ள விரும்புவோர் தடுப்பூசி மையங் களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே 15 முதல் 18 வயதுக் குட்பட்டவர்களில் சிலருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட வேண்டும் என அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரி வித்துள்ளது. சிலருக்கு மற்ற தடுப்பூசிகள் போடப்படுவதாகவும் ஆனால் தங்களுக்கு மட்டுமே அரசின் அனுமதி இருப்பதாகவும் பாரத் பயோடெக் விளக்கமளித்துள்ளது.