திங்களன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த பொழுது 25- ஆவது ஓவரில் அந்த அணி வீரர் சம ரவிக்ரமா ஆட்டமிழந்தார். அதன்பிறகு முன்னாள் கேப்டனும், அனுபவ வீரரு மான ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி னார். பட்டை சரியில்லாத ஹெல்மட்டை மாற்றி எடுத்து வந்து மாற்று ஹெல்மெட் டிற்காக காத்துக் கொண்டு இருந்தார். கிரிக்கெட் விதிப்படி பெவிலியனில் இருந்து பேட்டிங் செய்ய வரும் வீரர் 3 நிமிடத்திற்குள் பந்தை எதிர்கொண்டு களத்தில் நிற்க வேண்டும் என்ற நிலை யில், ஹெல்மட் வரும் வரை மேத்யூஸ் பேட் செய்யாமல் காத்திருந்ததால் இத னை வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹாசன் சுட்டிக்காட்ட, நடுவர் “டைம் அவுட்” விதியின்படி ஏஞ்சலோ மேத் யூஸ் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். 146 சர்வதேச கிரிக்கெட் உலகின் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக “டைம் அவுட்” முறையில் வீரர் ஒருவர் ஆட்டமிழப்பது முதல்முறை என்பதால் கடும் சர்ச்சை உருவாகிய து. சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கின்ற விதியைத் தான் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் கடைபிடித்துள் ளார். அவர் செய்தது சரியானதுதான். தவறு ஏதும் கிடையாது என்றாலும், இளம் அணியிடம் தோல்வி மற்றும் “டைம் அவுட்” விவகாரத்தை ஜீரணிக்க முடியாமல் போட்டி முடிவின்பொழுது இலங்கை அணி வீரர்கள் வங்கதேச வீரர் களிடம் கைகுலுக்காமல் சென்றனர்.
மேத்யூஸ் சகோதரரின் வன்முறை பேச்சு
இந்த விவகாரம் தொடர்பாக ஏஞ்ச லோ மேத்யூஸ் சகோதரர் டிரிவின் மேத்யூஸ் வங்கதேசம் - இலங்கை நாடு களுக்கு இடையே வன்முறையை தூண் டும் அளவிற்கு கருத்து தெரிவித்துள் ளார். டிரிவின் மேத்யூஸ் கூறுகையில், “ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் கார ணமாக வீழ்த்தப்பட்டது மிகுந்த ஏமாற் றம் அளிக்கிறது. வங்கதேச கேப்டன் ஷா கிப் அல் ஹாசனுக்கு எந்த ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பும் கிடையாது. கிரிக்கெட் போன்ற ஜென்டில்மேன் ஆட்டத்தில் கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி செயல்பட்டுள்ளார். நிச்சயம் ஷாகிப் இலங்கைக்கு வரவேற்கப்படமாட்டார். ஒருவேளை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலோ அல்லது எல்பிஎல் தொடரிலோ விளையாட ஷாகிப் இலங் கை வந்தால், கற்களை வீசி அவர் மீது தாக்குதல் நடத்த நேரிடும் அல்லது இல ங்கை ரசிகர்களின் எரிச்சலை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார். சாதாரண விளையாட்டு நிகழ்வில் நாடுகளுக்கு இடையே வன்முறையை தூண்டும் அள விற்கு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ள மேத்யூஸ் குடும்பத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.