திருவனந்தபுரம், ஏப்.19- கேரளத்தின் கோவிட் புள்ளிவிவ ரங்கள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், ஆனால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கோவிட் புள்ளிவிவரங்கள் மின்ன ஞ்சல் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப் படுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் மூன்று ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒன்றிய அரசு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அமைச்சர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.