காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டம், கடந்த சனிக் கிழமையன்று, தில்லி யிலுள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கி ரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தேர்தல் வியூக வகுப்பா ளரான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். அப்போது “2024 மக்கள வைத் தேர்தலில் மொத்தம் 370 இடங்க ளுக்கு மட்டும் காங்கிரஸ் கவனம் செலுத்தி னால் போதும்” என்பது உள்ளிட்ட ஆலோ சனைகளை காங்கிரசுக்கு அவர் வழங்கி னார்.இந்நிலையில், திங்களன்று மீண்டும் சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியுள்ளார்.