ரகுராம் ராஜன் எச்சரிக்கை
புதுதில்லி, ஜன.24- இந்தியப் பொருளாதாரத்தில் சில அம்சங்கள் நம்பிக்கை அளிப்ப தாகவும், பல அம்சங்கள் கவலை தரு வதாகவும் உள்ளன என்று பொரு ளாதார வல்லுநரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகு ராம் ராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ரகுராம் ராஜன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்ப தாவது: கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தி யப் பொருளாதாரம் மீண்டுவரும் நிலையில் அது ‘K’ வடிவ மீட்சியை (K-Shaped recovery) நோக்கிச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண் டும். ஐடி நிறுவனங்கள் மற்றும் பன் னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையும் வளர்ச்சியை விட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறைந்த வேகத்தில் வளர்ந்தால் அது ‘K’ வடிவ பொருளாதார வளர்ச்சி (K-Shaped recovery) எனப் படுகிறது. இதுபோன்ற மீட்சியில், தொழில் நுட்ப துறையும், பெரும் நிறுவனங்க ளும் லாபகரமாக செயல்படும். ஆனால் அதே வேளையில் சிறு, குறுந் தொழில்கள் கடனில் சிக்கித் தவிக்கும். தற்போது, இந்தியப் பொருளா தார மீட்சி, ‘
K’ வடிவ பொருளாதார வளர்ச்சியில் (K-Shaped recovery) செல்வதாகவே உள்ளது. சில பிர காசமான இடங்களும், நிறைய இருட் டான இடங்களும் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகிதம் அதிகரிப்பு, ஐடி நிறு வனங்கள் மற்றும் ஐடி துறையால் ஆதரவு பெறும் துறைகள், பல்வேறு துறைகளில் உருவாகும் யூனிகார்ன் நிறுவனங்கள், நிதித் துறையின் சில வலுவான பகுதிகள் ஆகியவை பிரகாசமான இடங்கள் என்றால், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, வாங்கும் சக்தி குறைவு, குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்களின் வாங்கும் சக்தி சரிவு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சந்திக்கும் நிதி நெருக்கடி,
பள்ளிக் கல்வியின் அவல நிலை ஆகியவை இருட்டான இடங்க ளாக உள்ளன. நடுத்தர வர்க்கத்து மக்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, குழந்தைகள் ஆகியோருக்கு பொரு ளாதாரம் அச்சம் அளிக்கும் வகை யில் உள்ளதுதான் எனது கவலை. நுகர்வு வளர்ச்சி, குறிப்பாக வெகு ஜன நுகர்வுப் பொருட்களின் நுகர்வு வளர்ச்சி குறைவாக இருப்பது இதற்கு முக்கிய அறிகுறியாகும். மருத்துவ ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் ஒமைக்ரானும், இந்திய பொருளாதார மீட்சிக்கு ஒரு பின்னடைவுதான். எனவே, ‘K’ வடிவ பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் எச்ச ரிக்கை செய்துள்ளார்.