states

img

ராமரின் பெயரால் பாஜக மிகப்பெரிய மோசடிகளை செய்து வருகிறது!

மதுரா, ஜன.19- கொள்கையும் நேர்மையும் இல்லாத கட்சி பாஜக என்றும், ராமரின் பெயரால் மிகப்பெரிய மோசடிகளை பாஜக அரங் கேற்றி வருவதாகவும் மதுரா வைச் சேர்ந்த பாஜகவின் மூத்தத் தலைவர் எஸ்.கே. சர்மா குற்றம் சாட்டியுள்ளார். மதுராவின் முக்கிய பாஜக தலைவராக வலம் வந்தவர் எஸ்.கே. சர்மா. இங்குள்ள பெரும் பணக் காரர்களில் குறிப்பிடத்தக்க வர். 2009 முதல் உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிட முயன்று வருகிறார். இந்த முறை நிச்சயம் மதுராவின் மந்த் தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந் தார். ஆனால், வழக்கம்போல இம்முறையும் பாஜக அவரை ஏமாற்றி விட்டது. ராஜேஷ் சவுத்ரி என்பவரை வேட்பாள ராக அறிவித்து விட்டது. இதை எதிர்த்து சர்மாவின் ஆதரவாளர்கள் மதுரா பாஜக அலுவலகம் முன்பு, 2 நாட்க ளாக ஆர்ப்பாட்டம் நடத்திப் பார்த்தனர். எனினும், முடிவு மாறவில்லை.

இதனால் மிக வும் மனம் நொந்துபோன எஸ்.கே. சர்மா, பாஜக-விலிருந்து விலகியதுடன், கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.  ‘’இதுவரை பாஜகவிற்காக செலவிட்டு, நான் எனது பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்துள்ளேன். கட்சிப் பணிக்காக எனது தலைவர்கள் எப்போது பணம் கேட்டாலும் மறுக்காமல் அளித்து உதவிய நான், இன்று ஏமாற்றப்பட்டுள் ளேன். கடந்த 2009 முதல் எனக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக் கப்பட்டு வருகிறது. இதற்கு, பாஜக தனது கொள்கையை யும், நேர்மையையும் இழந்து விட்டதுதான் காரணம். பாஜக-வில் ராமர் பெயரில் பெரும் மோசடிகள் நடக்கின்றன. இனி இக்கட்சியில் இருந்து எந்தப் பலனும் பொதுமக்களுக்கு  அளிக்க முடியாது.’’ என்று அந்த பேட்டியில் அவர் கூறி யுள்ளார். தனது விலகலுக்குப் பின், சர்மா தனது வீட்டின் முன்பிருந்த பாஜக பேனர் களையும் கிழித்தெறிந்துள் ளார். அவரது விலகல், மதுரா வில் பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படு கிறது.