states

img

பிஎம்கேவிஒய் திட்டத்தில் வெறும் 22% பேருக்கு மட்டுமே வேலை

புதுதில்லி, மார்ச் 20- பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ் சான்றிதழ்  பெற்றவர்களில் வெறும் 22% இளைஞர் களுக்கு மட்டுமே உண்மையில் வேலை கிடைத்தது. மோடி அரசின் கொள்கைகள் அனைத்தையும் வீணடிக்கிறது என மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டி யுள்ளார்.

பிஎம்கேவிஒய் திட்டம்

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ளவர்களாக தயார்படுத்துவது மற்  றும் அவர்களின் பணிசார் திறன்களை மேம் படுத்துவது, குறிப்பாக கிராமப்புற மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதியை ஏற்படுத்தவும், அமைப்புசாரா துறைகளில் தினக்கூலி அடிப்படையில் வேலை பெற்று வரும் இளைஞர்களின் திறன்களை மேம் படுத்தவும் கடந்த 2015-ஆம் ஆண்டு மோடி  அரசாங்கத்தால் பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற பெயரில்  வேலைப் பயிற்சித் திட்டம் துவங்கப்பட்டது.  இந்தத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைக் கான அங்கீகாரமும் கொடுக்கப்படுகிறது. 

கடும் சரிவில் பிஎம்கேவிஒய்

பிஎம்கேவிஒய் திட்டம் 2015-2016, 2016-2020, 2020-2022 என இதுவரை மூன்று கட்டங்க ளைக் கண்டுள்ளது. முதல் கட்டத்தில் (2015-2016) 19.86 லட்சம் பேர் பயிற்சி பெற்று  18.4% பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இரண்  டாவது கட்டத்தில் (2016-2020 நான்காண்டுகள்)  1.9 கோடி பேர் பயிற்சி பெற்று 23.4% பேர் வேலை  வாய்ப்பு பெற்றனர். மூன்றாம் கட்டத்தில் (2020- 2022) 4.45 லட்சம் பேர் பயிற்சி  பெற்று வெறும்  10.1% மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ள னர். ஒவ்வொரு கட்டத்திலும் பயிற்சி மற்றும்  வேலைவாய்ப்பு பெறுபவர்களின் விகிதம் வெகுவாக சரிந்து வருகிறது. (இரண்டாம் கட்டம் 4 ஆண்டுகளை கொண்டது. அதனால்  அதிக புள்ளி விபரங்களை கொண்டது)

நான்கில் ஒருவர் மட்டுமே!

பிஎம்கேவிஒய் திட்டத்தில் வேலை வாய்ப்பிற்கான சாதகமான சூழல் இருப்பதாக தெரியவில்லை. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆய்  வறிக்கையின் படி பிஎம்கேவிஒய் திட்டத்தில்  பயிற்சியளிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டவர் களில் நான்கில் ஒருவர் மட்டுமே அதாவது வெறும் 22.2% மட்டுமே வேலைவாய்ப்பை (மார்ச் 14, 2023 வரை) பெற்றுள்ளனர். இந்த  திட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள், வேலை வாய்ப்பு பெறுபவர்களின், எண்ணிக்கை ஒவ் வொரு ஆண்டும் வெகுவாக குறைந்து வரு கிறது. 

இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே முன்னேற்றம்

பிஎம்கேவிஒய் திட்டத்தில் 36 மாநிலங்க ளில் (யூனியன் பிரதேசம் சேர்த்து) இட ஒதுக்கீடு அடிப்படையில் லடாக் (யூனியன் பிரதேசம்)  (57.65 சதவீதம்), மிசோரம் (41.16 சத வீதம்), பஞ்சாப் (39.26 சதவீதம்), சிக்கிம் (38.32  சதவீதம்) மற்றும் புதுச்சேரி (34.09 சதவீதம்)  ஆகிய மாநிலங்கள் மட்டுமே ஓரளவு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளன. நாட்டின் பங்குச் சந்தை உள்ள மாநிலமான மகாராஷ்டிரா 10%-க்கும் குறைவான அதாவது வெறும் 8.93%  பிஎம்கேவிஒய் வேலைவாய்ப்பை பெற்றுள் ளது. யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிக்கோபார் 4.22 சதவீதம் மட்டுமே. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் ஆளப்படும் லட்சத்தீவில் ஒருவர் கூட இதுவரை (0%) பிஎம்கேவிஒய் திட்டத்தில் பயன் பெறவில்லை.

4-வது கட்டம் எப்பொழுது?

பிஎம்கேவிஒய் திட்டத்தின் மூன்றாவது கட்டம் (2020-2022) முடிவடைந்து ஓராண்டைக் கடந்துவிட்ட நிலையில், நான்காவது திட்டம் தொடங்குவதற்கான எவ்வித அறிவிப்பை யும் மோடி அரசு உறுதியாக வெளியிட வில்லை. ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும்  தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நான்காவது கட்ட திட்டம் விரைவில் தொடங்கப்படும் என பெயரளவில் கூறினார். இந்நிலையில் பிஎம்கேவிஒய் திட்டத்தின் உண்மை நிலவரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பகட்டுப் பிரச்சாரமும் மற்றும் ஆரவாரமும் ஒருபோதும் ஒன்றையும் வழங்காது. கவுசல்  விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சான்றிதழ்  பெற்றவர்களில் வெறும் 22% இளைஞர் களுக்கு மட்டுமே உண்மையில் வேலை கிடைத்தது. மோடி அரசின் கொள்கைகள் இளைஞர்களின் சக்தியையும், இந்தியாவின் மாபெரும் மக்கள் வளத்தையும் வீணடிக் கிறது” எனக் கூறியுள்ளார்.



 

;