புதுதில்லி, மார்ச் 21- “பள்ளத்தாக்குகளில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது பரிவு காட்டும் பிரதமர் மோடியும், பாஜகவும் அவர் கள் காஷ்மீருக்கு திரும்ப இதுவரை நட வடிக்கை எடுக்காதது ஏன்?” என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, ‘சாம்னா’ பத்திரிகையில் எழுதியுள்ள தலையங்கத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்ப தாவது: “தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை பிரத மர் நரேந்திர மோடியும், பாஜக-வினரும் ஏகத் துக்கும் புகழ்ந்து வருகின்றனர். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் கொல்லப் பட்டதையும், அவர்கள் வெளியேற்றப்பட்ட தையும் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. இதைப் பார்க்கும் போது உண்மையிலேயே கஷ்டமாக உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமின்றி அனை வரும் மோசமான சூழலை எதிர்கொண்டனர். அந்த நாட்களில் காஷ்மீர் சீக்கியர்களும் முஸ்லிம்களும்கூட கொல்லப்பட்டனர். கடந்த 1989-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் முகமது யூசுப் ஹல்வாய் கொல்லப்பட்டார்.
இதுதான் அங்கு நடை பெற்ற முதல் அரசியல் கொலை. அதற்கு முன்பு காவல்துறை ஐஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ஐஜியின் பாதுகாவலர் உயிரிழந்தார். சுதந்திரத்துக்குப் பிந்தைய 43 ஆண்டு கள் வரை காஷ்மீரில் இருந்து வெளியேறு வதற்கான நிர்ப்பந்தம் காஷ்மீர் பண்டிட்டு களுக்கு ஏற்படவில்லை. கடந்த 1990-ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகளும் சீக்கியர்களும் காஷ்மீரிலிருந்து வெளி யேறியபோது கூட, மத்தியில் பாஜக ஆதரவு டனான வி.பி. சிங் ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் பாஜக தலைவர் ஜக்மோகன்தான். இதுபோன்ற பல உண்மைகள் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் காண் பிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை தயாரித்த வர்கள் முன்பு ‘தி தாஷ்கண்ட் பைல்ஸ்’ படத்தை தயாரித்திருந்தனர்.
அந்தப் படத்தி லும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்துக்கு நேரு குடும்பத்தி னர்தான் காரணம் என்று தவறாக சித்த ரிக்கப்பட்டிருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது, பிரதமர் மோடியும், பாஜக-வும் பரிவு காட்டு வது உண்மையாக இருந்தால், காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகும் கூட, அவர்களை மறு குடியமர்வு செய்ய நட வடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், இந்து பண்டிட்டு களுக்கு நல்லது செய்வது பாஜகவின் நோக் கம் அல்ல. அவர்களை வைத்து அரசியல் செய்வது தான் அக்கட்சியின் நோக்கமாக இருக்கிறது. தற்போது காஷ்மீர் பைல்ஸ் மூலம் இந்துக்கள்-முஸ்லிம்கள் இடையே மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. குஜராத், ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள தைக் கருத்தில் கொண்டு, ‘தி காஷ்மீா் பைல்ஸ்’ திரைப்படத்தைப் பாஜக விளம்ப ரப்படுத்துகிறது. காஷ்மீர் போன்ற சென்சிடிவ் பிரச்சனை யில் அரசியல் செய்வது சரியல்ல. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ வெறும் படம். வரும் தேர்தலில் இந்த படம் யாருக்கும் அரசியல் ஆதாயம் அளிக்காது என நினைக்கிறேன். தேர்தல் வருவதற்குள் படம் போய்விடும். இவ்வாறு அரசியல் செய்வதற்கு பதில் அவர்களின் காயங்களுக்கு மருந்து தடவ வேண்டும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.