மும்பை, மார்ச் 19- “மகாராஷ்டிரத்தில் நிலவி வந்த சுமூகமான அரசியல் சூழலைக் கெடுத்தது பாஜக-தான்” என்று சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேர வைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல் வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரி வித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா தலைவர் சஞ் சய் ராவத் மும்பையில் வெள்ளிக் கிழமையன்று செய்தியாளா்களுக் குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது. அடுத்த இரண் டரை ஆண்டுகளும் இதேபோன்ற சிறப்பான ஆட்சி தொடரும். 2024 சட்டப் பேரவைத் தோ்தலிலும் எங் கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதால் அதீத உற்சா கத்தில் பட்னாவிஸ் பேசி வரு கிறார். கோவாவைப் பிடித்து வைத் திருந்த பிரிட்டிஷ்காரர்கள், போர்த்துகீசியர்களால் கூட அந்த மாநிலத்தை புரிந்து கொள்ள முடி யாத நிலை இருந்தது. இனிவரும் நாட்களில் கோவா குறித்து பட்னா விஸ் புரிந்து கொள்வார். மகாராஷ்டிர அரசியலில் ஒரு காலத்தில் சுமுகமான அரசியல் சூழல் இருந்தது. பண்பாட்டு ரீதியாக வும், நாகரிகமான நகைச்சுவை உணர்வுடனும் அரசியல் தலை வர்கள் செயல்பட்டு வந்தனா். ஆனால், பாஜக இங்குள்ள அரசி யல் சூழலைக் கெடுத்துவிட்டது. இப்போது வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க அஞ்சும் நிலை தான் உள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப் பிட்டுள்ளார்.