மும்பை, மார்ச் 23- “பாகிஸ்தானுக்காக முகமது அலி ஜின்னா நாட்டை ஒருமுறை பிரித்தார். ஆனால் பாஜக தலை வர்கள் இந்து, முஸ்லிம்கள் இடை யே வெறுப்புணர்வை ஏற்படுத் தும் பேச்சுகள் மூலம் தினமும் பிளவுபடுத்துகிறார்கள்” என்று சிவசேனா தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் விமர் சித்துள்ளார். நாக்பூரில் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், “நாட்டில் 22 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பெருமளவில் பாஜக மற்றும் சிவ சேனாவுக்கு வாக்களித்துள்ள னர். பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா நாட்டை ஒருமுறை பிரித்தார். ஆனால் பாஜக தலைவர்கள் இந்து, முஸ்லிம்கள் இடையே வெறுப்புணர்வை ஏற் படுத்தும் பேச்சுகள் மூலம் தின மும் நாட்டை பிளவுபடுத்துகின் றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார். “சிவசேனாவை ‘ஜனாப் சேனா’ என்று கூறும் பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெயரை மாற்றுவார்களா? அந்த அமைப்பின் தலைவரான மோகன் பகவத்தின் பெயர் ‘ஜனாப் பகவத்’ என்று மாற்றப் படுமா?” என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், “காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அம லாக்கத்துறை 23 சோதனை களை நடத்தியது. ஆனால் கடந்த 7 ஆண்டு மோடி ஆட்சியில் 23 ஆயி ரம் சோதனைகள் நடத்தப்பட்டு திகைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதில் அதிகப்பட்ச சோதனை களை மகாராஷ்டிரா, மேற்கு வங் கத்தில்தான் நடத்தி உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் மத் திய விசாரணை முகமைகள் சோதனை நடத்தாதது ஏன்?” என் றும் ராவத் கேட்டுள்ளார்.