states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எஸ்எப்ஐ பொது செயலாளர் மயூக் பிஸ்வாஸ்

பக்ரீத் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட முடியாத படி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு மற்றும் வீடுகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டதன் அவமானமும் அநீதியும் பாலஸ்தீனர்களுக்கு தொடர்கிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவும் இல்லை. அம்மாநிலத்தை சேர்ந்த யாரிடமிருந்தும் எதுவும் கேட்க இதுவரை தயாராகவும் இல்லை. உக்ரைன் - ரஷ்யா போரை மோடி நிறுத்திவிட்டதாக பாஜகவினர் கூறினர். ஆனால் மணிப்பூர் கலவரத்தையே அவரால் நிறுத்த முடியவில்லை என்பது அம்பலமாகிவிட்டது.

பத்திரிக்கையாளர் சுஷாந்த் சிங்

துல்லியமாகச் சொன்னால், கடந்த கால போர்களின் போது, இந்தியா எப்போதும் போரில் ஏற்பட்ட இழப்புகளை, உள்ளதை உள்ளபடியே நேர்மையாகப் பகிர்ந்தது. அது நமது வீரர்களின் மன உறுதியைப் பாதிக்கவில்லை. இப்போது ஏன் உள்ளபடியே பகிர முடியாது?

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, அரசு செய்தித்துறை பல தவறான செய்திகளை மறுத்தது. ஆனால் கராச்சி துறைமுகத்தில் தாக்குதல்களை நடத்தியதாக வெளியிடப்பட்ட கற்பனையான செய்திகள் பரப்பிய இந்திய செய்தி நிறுவனங்களின் அப்பட்டமான தவறான தகவல்களைக் குறிப்பிட்டு கூறவில்லை.