ஐதராபாத், நவ.11- ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சனிக்கிழமை யன்று நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபியின் அச்சுறுத்தல் களை முறியடித்து எஸ்எப்ஐ-ஏஎஸ்ஏ-டிஎஸ்எப் கூட்டணி வெற்றி பெற்றது. ஆறு பொது இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கூட்டணி வெற்றி பெற்றது. 471 வாக்குகள் பெரும்பான்மையுடன் எஸ்எப்ஐயின் அதிக் அகமது தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ஏஎஸ்ஏ-வின் ஜல்லி ஆகாஷ் (388), பொதுச் செயலாளராக ஏஎஸ்ஏ-வின் தீபக் குமார் ஆர்யா (388), இணைச் செயலாளராக டிஎஸ்எப்-ன் லவ்டி பால ஆஞ்சநேயலு (641), ஏஎஸ்ஏ-வின் சமீம் அக்தர் ஷேக் (452), கலாச்சாரச் செயலாளராக, எஸ்எப்ஐ-யின் அதுல் (236) விளை யாட்டு செயலாளராக வெற்றிக்கொடி நாட்டினர்.