states

img

கட்சியை மறுசீரமைப்பது குறித்து காங்கிரஸ் யோசிக்க வேண்டும்!

புதுதில்லி, மார்ச் 10- “தொடர் தோல்வி ஏற்பட்டு வரும் நிலை யில், கட்சியை மறுசீரமைப்பது குறித்து, காங்கிரஸ் தலைமை யோசிக்க வேண்டும்” என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும், பஞ்சா பில் ஆம் ஆத்மி கட்சியும் பெரும்பான்மைக் கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாப்பைப் பொறுத்தவரை, பஞ்சாபில் தங்களது வாக்கு சதவிகிதத்தில் 50 சதவிகிதத்தை காங்கிரஸ் இழந்துள்ளது. கோவாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என கருதப்பட்டு வந்த நிலையில், அங்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையேதான், கட்சியை மறுசீர மைப்பது குறித்து யோசிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். “ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோற்றால், கட்சியை மறுசீரமைப்பது பற்றி  நாம் சிந்திக்க வேண்டும். பஞ்சாப்பில் அம்ரீந் தர் சிங்கை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி யது திடமான முடிவே ஆகும். ஆனால், அது விரும்பத்தகாத முடிவாக இருக்க லாம்” என்று சிங்வி குறிப்பிட்டுள்ளார்.