தில்லி நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் வாதம்!
புதுதில்லி, ஏப். 27 - “’பிஎம் கேர்ஸ்’ நிதியம் (PM CARES) அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது அல்ல; எனவும், அதனை பொதுத் தணிக் கைக்கு உட்படுத்த முடியாது என கூற முடியாது” என்றும் தில்லி உயர் நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் கூறியுள்ளார். நாட்டில் பல்வேறு வகையான இடர் பாடுகள் ஏற்படும் போது, மக்களுக்கு உதவி செய்வதற்கு, பிரதமர் நிவாரண நிதியம் (Prime Minister’s Relidf Fund - PMRF) என்ற அமைப்பு இருக்கிறது. நிறுவனங்கள், அமைப்புக்கள், தனி நபர்கள் இந்த அமைப்புக்கு வழங்கும் நன்கொடை, பிரதமர் அலுவலகம் மூல மாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்ற டையும். இதற்கான வரவு - செலவுக் கணக்கு அரசால் பராமரிக்கப்படும் என்ப துடன், மத்திய தலைமைக் கணக்கு அதி காரியின் தணிக்கைக்கும் உட்படுத்தப் படும். இதுதான் இவ்வளவு காலமும் இருந்த நடைமுறை. 2019 டிசம்பர் 31 நிலவரப்படி பிரதமர் நிவாரண நிதி யத்தில் ரூ. 3 ஆயிரத்து 800 கோடி அள விற்கு உபரி நிதியும் இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில், பிரதமர் நரேந்திர மோடி திடீரென பிரத மரின் அவசரகாலச் சூழ்நிலை குடிமக் கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (The Prime Minister’s CitizenAssistance and Relidf in Emergency SituationsFund- PM CARES FUND) என்ற நிதியமைப்பை, 2020 மார்ச் 28-ஆம் தேதி அவசர அவசரமாக உருவாக்கிக் கொண்டார். இந்த அறக் கட்டளைக்கு தன்னைத் தலைவராக வும், மூத்த அமைச்சர்களை உறுப்பினர் களாகவும் நியமித்துக் கொண்டார். மேலும் இந்த அறக்கட்டளையின் கீழ் பல ஆயிரம் கோடிகளை நன்கொடை யாக பெற்றார்.
ஆனால், இதற்கான வரவு - செலவு குறித்து வெளிப்படையாக தெரி விக்கப்படவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியபோது, “தகவலுரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 எச்-இன் படி பொது அதிகாரத்தின் கீழ் ‘பிஎம் கேர்ஸ்நிதியம்’ வராது. வேண்டுமானால் இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ள லாம்” என பதிலளிக்கப்பட்டது. மேலும், பிஎம் கேர்ஸை, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (CAG) தணிக்கைக்கும் உட்படுத்த முடி யாது என்று கூறப்பட்டது. இப்போது வரை பிஎம் கேர்ஸ் நிதியம் மர்ம மாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 12-இன் படி, பி.எம் கேர்ஸ் நிதியை அர சுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என சம்யாக் காங்க்வால் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
“பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதி யமைச்சர் ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டுள்ள அறக்கட்டளையின் மீது அரசுக்குக் கட்டுப்பாடு இல்லை எனக் கூறியிருப்பது நாட்டு மக்களுக்கு அதி ருப்தியை உருவாக்கியுள்ளது. எனவே, பிஎம் கேர்ஸ் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ‘பிஎம் கேர்ஸ்’ என்பது அரசுக்கு சொந்தமான நிதி அல்ல என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; நிதியத்தில் பிரத மரின் பெயரை (“PM” என) பயன்படுத்து வதைத் தடுக்க வேண்டும்; அரசு முத்தி ரைகளும் விளம்பரங்களில் இடம் பெறக் கூடாது, இணையதளத்தில், கவர் மெண்ட் (‘gov’) என்ற டொமைன் பெய ரைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்; பிஎம் கேர்ஸ் நிதியானது பிரதமரின் அலுவலகத்தை அதன் அதி காரப்பூர்வ முகவரியாகப் பயன்படுத்து வதையும் தடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தில்லி உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, செவ்வா யன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்யாக் காங்க்வால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆஜராகி வாதாடினார். அப்போது, “நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், சில உறுப்பினர்களும் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, அதில் நிதியுதவி செய்ய மக்களிடம் கேட் டுள்ளனர். அதற்கான காரணம் பாராட்டத் தக்கது. ஆனால், முதன்மையான கேள்வி என்னவென்றால், அரசிய லமைப்புச் செயல்பாட்டாளர்கள் ஒரு குழுவை உருவாக்கி, அது அரசி யலமைப்பின் எல்லைக்கு வெளியே செயல்படும் என்று முடிவு செய்ய முடி யுமா? இந்த நிதி இந்தியப் பிரதமரு டன் மிகவும் நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளது. அதன் அறங்காவலர் குழுவில் அமைச்சரும் அடங்குவர். ஆனால் அது சிஏஜி விசாரணையின் கீழ் வராது எனவும் கூறுவதை அரசிய லமைப்புச் சட்டத்தின் படி ஏற்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “பி.எம் கேர்ஸ் நிதியை, ஒன்றிய அரசுதான் முழுமையாக கட்டுப் படுத்துகிறது, பிரதமர் அலுவலகம் மூல மாக அரசுதான் இந்த நிதியத்தையே உருவாக்கியது. அரசு நிர்வாகத்தைப் போலவே பொது நிதியாக பி.எம் கேர்ஸ் நிதி செயல்படுகிறது. மேலும், அரசுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு விதிமுறைகளையும் அது பயன் படுத்திக் கொள்கிறது. அவ்வாறிருக்க பொதுத் தணிக்கைக்கு உட்பட முடியாது என்று அந்த அறக்கட்டளை கூறுவது எவ்வாறு சரியாகும்...?” என்று கேட்ட ஷ்யாம் திவான் “பொதுப் பொறுப்புக் கூறல் முக்கியப் பிரச்சனையாகும். சட்டத்தின் ஆட்சிக்கும், அரசிய லமைப்பு ஜனநாயகத்தைப் பாதுகாப்ப தற்கும் நல்லாட்சியும் வெளிப்படை யான அரசாங்கமும் அவசியம்” என வலியுறுத்தினார். அப்போது, ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆகாததால், வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என ஒன்றிய அரசுத் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டது. பின்னர், வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிமன்ற அமர்வு முன்னி லையில் துஷார் மேத்தா ஆஜரானார். அவர், பிஎம் கேர்ஸ் குறித்து எதுவும் கூறாமல், “முதலில் இந்த மனுவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்று வழக்கை திசைத் திருப்ப முயன்றார்.
எனினும், பி.எம் கேர்ஸ் நிதி அரசி யலமைப்புக்கு அப்பாற்பட்டது அல்ல எனவும், தணிக்கைக்கு பதிலளிக்கும் பொதுப் பொறுப்பில் இருந்து அதனை நீக்க முடியாது எனவும் தில்லி நீதி மன்றத்தில் ஷ்யாம் திவான் வாதங் களைத் தொடர்ந்தார். இந்த வாதங் களைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.