states

“தலையாட்டி பொம்மை”: மோடி பெருமிதம்

புதுதில்லி, மே 29- தஞ்சாவூரிலிருந்து சுய உதவிக் குழுவினர் அனுப்பிய “தலையாட்டி பொம்மை” தமக்குக் கிடைத்தாகவும். அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மோடி கூறினார். ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் தமிழகத்தின் தஞ்சாவூரி லிருந்து சுய உதவிக் குழு வினர் எனக்கு புவிசார் குறியீடு கொண்ட தஞ்சாவூர் பொம்மையை பரிசா அனுப்பினர். உள்ளூர் கலாச்சாரம் நிறைந்த இந்த பரிசை எனக்கு அனுப்பி யதற்கு தஞ்சாவூர் சுய உதவிக் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.      இந்த தஞ்சாவூர் பொம்மை அழகாக இருப் பது மட்டுமின்றி, பெண்க ளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை எழுதுகிறது.   இந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தஞ்சாவூரில் மிக முக்கியமான இடங்களில் கைவினைப்பொருள் விற்பனை அங்காடியை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், கைவினைஞர்கள் புத்துணர்ச்சி பெறுகின்றனர். பெண்களின் வருமானமும் உயர்கிறது என்றார்.