states

img

வேலையின்மை, விலைவாசி உயர்வை திசைத்திருப்ப முயற்சி!

அமராவதி, ஏப்.12- முக்கியப் பிரச்சனை களிலிருந்து மக்களின் கவ னத்தைத் திசைத்திருப்பவே சமூகத்தில் பிளவு ஏற் படுத்தும் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாக தேசி யவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், அமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சரத் பவார் உரையாற்றினார். அப்போது இந்த குற்றச் சாட்டை அவர் முன்வைத்தார். மேலும் பேசிய அவர், “இந்துக்களிடையே அமைதி யின்மையை உருவாக்கவும், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை மக்களுக்கு காண்பிப்பதில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மத அடிப்படையில்  சமூகத்தில் பிளவை ஏற் படுத்த முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.

இது துர திர்ஷ்டவசமானது. நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உய ர்ந்து கொண்டிருக்கும்போது, முக்கியமான பிரச்சனை களில் இருந்து மக்களின் கவ னத்தை திசைத் திருப்புவ தற்காக இதனை ஆட்சியா ளர்கள் மேற்கொண்டுள்ள னர். மக்களிடையே வேலை யில்லா திண்டாட்டத்தை அதி கரித்து, அவர்களின் கவ னத்தை வேறு பிரச்சனை களின் மீது திருப்புகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்பு களை தவறாகப் பயன்படுத்து வதன் மூலமும், மாநிலங்க ளுக்கு இடையே சர்ச்சை களை உருவாக்குவதன் மூல மும், தலைவர்களுக்கு எதி ரான விசாரணையை நடத்து வது மூலமும், தாங்கள் ஆட்சி யில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிக் கிறது” என்று குற்றம் சாட்டி யுள்ளார்.