மும்பை, பிப்.7- பிரபல திரைப்பட பின் னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92) உடல்நலக் குறைவு கார ணமாக ஞாயிறன்று காலமா னார். அவருடைய உடல் மும்பை சிவாஜி பார்க் பகுதி யில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக லதா மங் கேஷ்கர் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், திரைக்கலை ஞர்கள் பலரும் நேரில் அஞ் சலி செலுத்தினர். பாலிவுட் முன்னணி நடிகரான ஷாரூக் கானும் லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி னார். ஆனால், அஞ்சலியின் போது லதா மங்கேஷ்கர் மீது ஷாரூக்கான் எச்சில் துப்பி யதாகவும், இதன்மூலம் மங்கேஷ்கரை ஷாரூக்கான் அவமதித்து விட்டார் என்றும் சங்-பரிவார் ஆதரவாளர்கள் வீடியோ ஒன்றை பரப்பினர்.
இது சமூகவலைதளங்களில் சர்ச்சையையும், விவா தங்களையும் ஏற்படுத்தியது. ஷாரூக்கானுக்கு கண்ட னங்களுக்கும் எழுந்தன. இந்நிலையில், லதா மங்கேஷ்கரை, ஷாரூக் கான் ஒருபோதும் அவம திக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் விளக்கம் அளித் துள்ளனர். “லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ஷாரூக்கான் செய்தது ‘துவா’ எனப்படும் பிரார்த் தனை ஆகும். அதாவது, இறந்தவர்கள் முன்பாக, இஸ்லாமிய முறைப்படி குரான் வசனம் ஒன்றை கூறி அந்த வார்த்தைகள் இறந்த வர்களுக்கு செல்லும் வகை யில் ஊதுவது ஆகும். அதைத்தான் ஷாரூக் கான் செய்தார்” என்று அந்த விளக் கத்தில் ரசிகர்கள் குறிப்பிட் டுள்ளனர்.