ம ல்யுத்த வீராங்கனைகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு தில்லியில் நடந்த பத்திரிகையா ளர் சந்திப்பில் மேசை யில் பூட்ஸை வைத்து விட்டு கதறி அழுத சாக்சி மாலிக், உணர்ச்சிவசப் பட்டு எதிர்வினை யாற்றியதை அனை வரும் பார்த்திருப்பார் கள். இப்போது நம்பிக் கையின் முகத்துடன், இணைந்த கைகளுக்கு வலிமை கேட்கிறார் இந்த மல்யுத்த வீராங் கனை. சாக்ஷி மாலிக் வெளியிட்டுள்ள காணொலி யில், தமக்கு ஏற்பட்ட துன்பத்தின் போது உதவி செய்ய வந்த ஆனி ராஜாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறார். அநியாயத்திற்கு எதிராக செயல்பட்ட மல்யுத்த வீரர்களை புறக்க ணிக்கவும் தனிமைப்படுத்தவும் முயன்றபோது ஆனி ராஜா செய்த தலையீடுகளைச் சுருக்க மாகக் கூறுகிறார். இந்த காணொலி ஏற்கனவே நவீன ஊடகங்களில் வைரலானது. மல்யுத்தக் கூட்டமைப்பில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால், வயநாடு மக்கள் ஆனி ராஜாவை ஆதரிக்க வேண்டும் என அந்த காணொலியில் கூடுதலாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த காணொலி வயநாடு வாக் காளர்கள் மத்தியில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. சிறுமி உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனை களால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வைச் சேரிந்த பிரிஜ்பூஷன் சரண் சிங். அவரின் நம்பிக்கைக்குரிய வணிக கூட்டாளியான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் தனது ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டு 2023 டிசம்பர் 21 அன்று, சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஊடகங்கள் முன் கண்ணீர் விட்டு அழுத சாக்சியின் ராஜினாமா மிகவும் உணர்ச்சிகரமானது.