states

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் : உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுதில்லி, ஏப். 11 - தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அணிவகுப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவையும், நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீது, நீதிபதிகள் வி.  ராமசுப்பிரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மார்ச் 3, மார்ச் 17, மார்ச் 27 ஆகிய தேதிகளில் விசாரணை  நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி வாதாடி னார். “உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கை களை கவனத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அரசு முழுமையான தடை எதையும் விதிக்கவில்லை; நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இட மில்லை என்ற அடிப்படையில் நிபந்தனைகளை விதித்துள்ளது” என்று வாதிட்டார்.  

ஆர்எஸ்எஸ் சார்பில் குரு கிருஷ்ண குமார், மேனகா குருசுவாமி, மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். “’பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுத்துள்ளது; அந்த அமைப்பு மீதான தடைக்குப் பிறகு, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை நீடிக்கிறது என்பதற்கு மாநில அரசி டம் ஆதாரம் இல்லை; எனவே, 19(1)(பி) பிரிவின் கீழ் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமையை மறுக்க முடியாது” என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை யிலான அமர்வு, “தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளது.