பெய்ஜிங், ஜன.29- வெளவால்களில் காணப்படும் நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா தொற்று மனிதர் களுக்கு பரவினால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்ச ரித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் வெளவால்கள் மத்தியில் பரவிவரும் நியோகோவ் வகை கொரோனா மெர்ஸ் சுவாசக் கோளாறை ஒத்து இருப்பதாக ஊஹான் பல்கலைக்கழகம் மற்றும் அகாதெமி ஆஃப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பையோபிசிக்ஸ் -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் உருமாறினால் மனிதர்கள் மத்தி யில் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போதைய வடிவத்தில், நியோகோவ் மனி தர்களைப் பாதிக்காது. ஆனால் மேலும் பிறழ்வுகள் தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த ஆய்வை பிற ஆய்வாளர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. நியோகோவ் வைரஸால் மனிதர்களுக்கு அபா யம் ஏற்படுமா என்பது குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்கள் என்பவை ஜல தோஷம் முதல் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) வரையிலான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாகும்.