புதுதில்லி,ஜன.11- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை உருவாக்கும் மக்களவை, மாநி லங்களவை எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்கு காலக்கெடு நீட்டிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நடைமுறைப்படுத்தவும், அமலாக்கம் செய்யவும் விதிமுறைகளை வகுக்க வில்லை. இதற்காக மக்களவை, மாநிலங்க ளவை எம்.பி.க்களைக் கொண்ட நாடாளு மன்றக் குழு உருவாக்கப்பட்டது. இந்த விதிகளை உருவாக்க ஏற்கெனவே இந்தக் குழுவுக்கு இருமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, அந்தக் காலக்கெடு கடந்த 9 ஆம் தேதியோடு முடிந்து விட்டது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, மாநிலங்களவை, மக்கள வைத் தலைவருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.