தமிழ்நாட்டில் பட்டாசு விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு, ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் அத்திப் பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேரும், மயிலாடுதுறை மாவட் டம் தில்லையாடியில் நாட்டு வெடி தயாரிக்கும்போது 4 பேரும், அரியலூர் மாவட்டம் விராகலூர் கிராமத்தில் நாட்டுவெடி தயா ரிக்கும் குடோனில் ஏற்பட்ட விபத் தில் 11 பேரும் உடல் சிதறி பலியான சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், உறவு களை இழந்து தவிக்கும் குடும் பத்தாருக்கு ஆறுதலையும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது. மேலும், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருவோர் விரைவில் குணமடைய விழைகிறோம். விபத்தில் உயிரிழந்தோ ருக்கும், காயம் அடைந்தவர் களுக்கும் நிவாரணத் தொகை யினை தமிழக அரசு அறிவித்துள் ளது. ஆனால், இத்தொகை இறந்த வர்களின் குடும்பத்தினரின் எதிர் கால வாழ்விற்கு போதுமானதாக இருக்காது. எனவே,தமிழக அரசு நிவாரணத் தொகையினை தலா ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங் கிட வேண்டும். இதேபோன்று ஒன்றிய அரசு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் வழங்கிடவும் வலியுறுத்துகிறோம். இத்தகைய பட்டாசு விபத்துகள் தொடர்ந்து நடைபெறும் சூழலில் அரசு விதிகளை முறையாக கடை பிடிப்பதற்கும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பட்டாசு தொழில் நடைபெறுவதையும் அரசு உறு திப்படுத்திட வேண்டும். மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்துவதோடு இதற்கான பிரி மீயம் தொகையினை சம்பந்தப் பட்ட பட்டாசு நிறுவனங்கள் செலுத் திட வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட் டுள்ள பட்டாசு தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்துவது டன் நலவாரியத்தின் மூலம் இறந்து போனவர் களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.