புதுதில்லி, ஏப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், மத்தியக்குழு முன்னாள் உறுப்பி னருமான இருந்த தோழர் மதன் கோஷ் மறை விற்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கி றது. அன்னாரது வயது 81. தோழர் மதன் கோஷ் வெள்ளியன்று காலை மேற்கு வங்கத்தில் பர்த்வான் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மறைவு குறித்து அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோழர் மதன் கோஷ், தன்னுடைய 17ஆவது வயதில் 1959இல் ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார். 1960களிலும் 70களி லும் மேற்கு வங்கத்தில் அரை பாசிச சக்திகள் தலைவிரித்தாடிய சமயத்தில் அவர் கட்சியின் பின்னால் மக்களை அணிதிரட்டுவதில், சுமார் இரண்டரை ஆண்டு காலம் தலைமறைவாக இருந்துகொண்டு, சுறுசுறுப்பாக இயங்கினார். தோழர் மதன் கோஷ் 1992இல் மேற்கு வங்க மாநிலக் குழுவிற்கும், 2002 ஆம் ஆண்டில் கட்சியின் மாநிலச் செயற்குழுவிற்கும் தேர்வு செய்யப்பட் டார். 2008இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் மதன் கோஷ், விவசாய இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக இருந்தார். மேற்கு வங்க மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு விவசாய இயக்கத்தை நாடு முழுதும் கொண்டுசெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். கொஞ்ச காலம் பர்துவான் மாநில ஜில்லா பரிஷத் தலைவராகவும் சேவை செய்தார். தோழர் மதன் கோஷ் உறுதிமிக்க, ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தோழர். அனைவரிடமும் மிகவும் அன்புடன் பழகக்கூடியவர். அனைவ ராலும் நன்கு அறியப்பட்ட தோழருமாவார். அரசியல் தலைமைக்குழு தோழர் மதன் கோஷை இழந்துவாடும் அவருடைய வாழ்க்கைத் துணைவியார் மற்றும் குடும்பத்தினருக்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரி வித்துக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது. இதேபோன்று அகில இந்திய விவசாயிகள் சங்கமும் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளது. (ந.நி.)