புதுதில்லி, ஜன.31- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கு வதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரை யாற்றினார். அப்போது அவர், நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நிதிநிலை கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து உறுப் பினர்களும் விரிவான ஆரோ க்கியமான விவாதங்களில் கலந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பட்ஜெட் தொடர் முக்கியமான நேரம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட வை உலக நாடுகளுக்கு நம்பி க்கை அளிக்கிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கை உல களாவிய அளவில் பொருளா தார வளர்ச்சியை மேம்படு த்தும். நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களை யும் விரிவாக விவாதிக்க ஒன்றிய அரசு திறந்தமனது டன் உள்ளது’’ என்று தெரி வித்தார்.